ஆப்நகரம்

Bigg Boss Tamil: முக்கோண காதலுக்கு முற்றுப்புள்ளி: பிக் பாஸ் வீட்டிலிருந்து சாக்ஷி வெளியேற்றமா?

கவினை காதலித்து வந்த சாக்ஷி காதல் தோல்வியால் மனமுடைந்து இருந்த நிலையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 5 Aug 2019, 12:47 pm
முதல் இரு தமிழ் பிக் பாஸ் சீசன்களைத் தொடர்ந்து விஜய் டிவியில் கடந்த ஜூன் 23ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நிகழ்ச்சியை தனது அரசியல் மேடையாக்கிய கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியையும் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடையே தெரிவித்து கைதட்டல்கள் பெற்று வருகிறார்.
Samayam Tamil bigg


இது ஒருபுறம் இருக்க, பிக் பாஸ் 3 வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் வாரத்தைத் தொடர்ந்து 2ஆவது வாரத்திலிருந்து எலிமினேஷன் தொடங்கியது. இதில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்ற ஃபாத்திமா பாபு முதல் போட்டியாளராகவே வெளியேற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து அதிகளவில் பேசி சண்டையிட்டுக்கொண்டிருந்த வனிதா விஜயகுமார் இந்நிகழ்ச்சியிலிருந்து 2ஆவது போட்டியாளராக வெளியேறினார்.

Also Read: Saravanan: முக்கோண காதலுக்கு வழியேயில்லை: தோற்றுப்போன கமல் ஹாசன்?


இதையடுத்து, 3ஆவதாக வெளியேற மனமில்லாமல் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், அடுத்து யாரை வெளியேற்றலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த பிக் பாஸ்க்கு வாலிண்டராக மீரா மிதுன் சிக்கினார். எப்போதும் மக்களிடையே வைரலாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த மீரா மிதுன் நாட்டாமை டாஸ்க்கின் போது சேரனை சீண்டியதால் மக்களிடம் எதிர்ப்பைப் பெற்றார். கமல் ஹாசனின் விமர்சனத்திற்கும் வந்த பிறகு மக்களால் வெளியேற்றப்பட்டார்.

Also Read: நாமினேஷனுக்கு தேர்வான 5 போட்டியாளர்கள்: ஆளாளுக்கு கண்ணீர் விட்டு கதறி அழுத சோகம்!


தற்போது இதே வரிசையில், சாக்‌ஷியும் இடம்பெற்றுள்ளார். ஆரம்பம் முதல் நல்ல பிள்ளையாக இருந்த சாக்‌ஷிக்கு கவின் உடன் காதல் மலர்ந்தது. ஆனால், கவின், அபிராமி, ரேஷ்மா, ஷெரின், லோஸ்லியா என்று அனைவரிடமும் பழகுவது போன்று தான் சாக்‌ஷியிடம் பழகி வந்துள்ளார். முதலில் அபிராமியிடம் நெருங்கி பழகி வந்த கவின், அதன் பிறகு சாக்‌ஷியின் காதலை புரிந்து கொண்டு அவருடன் பழகினார்.

Also Read: Online Vote Details:கவினா? சாக்ஷியா? நீங்கள் யாரை காப்பாற்ற போறீங்க: இப்போதே வாக்களியுங்கள்!


ஆனால், சாக்‌ஷியின் சுயரூபம் வெளியே வர, அவரிடம் இருந்து விலகி லோஸ்லியா பக்கம் தனது கவனத்தை திசை திருப்பினார். ஆனால், இதற்கு மனம் இடம் கொடுக்காத சாக்‌ஷி தொடர்ந்து கவினிடம் தனது காதலை வெளிப்படுத்தி வந்தார். இதையெல்லாம் கண்டுகொள்ளாத கவின் லோஸ்லியாவிடம் தான் நெருங்கி பழகினார். ஒரு கட்டத்தில் கோபத்தில் கொந்தளித்த சாக்‌ஷி கவினின் காதலை பிரேக்கப் செய்தார்.


அதன் பிறகும் கூட கவினிடம் பேசி வந்தார். அது வெறும் நட்பாகவே இருந்தது. அப்படியிருந்தாலும், லோஸ்லியா மற்றும் கவின் இருவரும் பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால், மூன்று பேருக்கும் இடையில் பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது. நேற்றைய நிகழ்ச்சியின் போதும் லோஸ்லியா மற்றும் சாக்‌ஷி ஆகியோர் மோதிக் கொண்டனர். சாக்‌ஷி கவின் லோஸ்லியா ஆகியோரது காதலை முக்கோண காதல் என்று கமல் ஹாசன் கூறினார்.


வெளியேற்றப்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதன் பிறகு ரேஷ்மா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரையில் போட்டியாளர்களுக்கும் சரி, பிக் பாஸ் ரசிகர்களுக்கும் சரி நடுநிலையாகவே இருந்தவர் ரேஷ்மா தான். அவர் வெளியேற்றப்படுவார் என்று யாருமே இவ்வளவு ஏன் பிக் பாஸ் போட்டியாளர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் முறையாக நாமினேசனுக்கு வந்தவர் ரேஷ்மா. அப்படியிருக்கும் போது எப்படி அவர் வெளியேற்றப்பட்டார்? என்ற கேள்வியும் எழுகிறது? உண்மையில் வெளியேற்றப்பட வேண்டியவர் சாக்‌ஷி தான். அப்படியில்லை என்றால் கவின். இவர்களால் தான் பிக் பாஸ் வீட்டில் பூகம்பம் வெடிக்கிறது. விவாதமும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த செய்தி