ஆப்நகரம்

Bigboss tamil6: அந்த ஒரு வார்த்தையால் வெடித்த சர்ச்சை..பிக் பாஸிடம் முறையிட்ட விக்ரமன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 30 Nov 2022, 7:36 am

ஹைலைட்ஸ்:

  • விக்ரமனின் செயல்
  • குவியும் பாராட்டுக்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விக்ரமன்
பிக் பாஸ் சீசன் 6 துவங்கி ஐம்பது நாட்களை கடந்துவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். தற்போது மொத்தம் 14 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

மேலும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சண்டைகள், சர்ச்சைகள் இருந்து வருவதால் ரசிகர்கள் ஆர்வமாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இதில் ஆரம்பத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக இருந்து வந்த ஜி.பி.முத்து தன் குடும்பத்தை பிரிந்து இருக்கமுடியாது என்று கூறி போட்டியை விட்டு தானாக வீட்டிற்கு சென்றார்.


Vadivelu: மீண்டும் தன் வேலையை காட்டிய வடிவேலு..கடுப்பில் இயக்குனர் செய்த செயல்..!

அதன் பின் ஷாந்தி, அசல், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஸினி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளனர். கடைசியாக ராபர்ட் மாஸ்டர் வெளியேற தற்போது 14 போட்டியாளர்கள் அடுத்தகட்டத்துக்கு செல்ல போட்டிபோட்டு வருகின்றனர்.


அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் இப்போட்டியை மிகசரியாக விளையாடும் ஒரு நபராக இருந்து வருபவர் தான் விக்ரமன். ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்த விக்ரமன் மெல்ல மெல்ல தன் கேமை விளையாட ஆரம்பித்தார்.


ரசிகர்களுக்கும் அவரது விளையாட்டு பிடித்த போகவே அவருக்கு மிகப்பெரிய ஆதரவை தந்தனர். இந்நிலையில் தற்போது விக்ரமனின் செயல் மீண்டும் அவரின் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது.
அதாவது இந்த வாரம் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.

இதில் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு அணியினர் ஏலியனாகவும், மற்றொரு அணியினர் பழங்குடியினராகவும் விளையாடி வருகின்றனர். இதில் ஒரு பிரிவினரை அடிமை என குறிப்பிட விக்ரமன் அடிமை என்றெல்லாம் சொல்லக்கூடாது என முறையிட்டார்.

இதையடுத்து பிக் பாஸ் சேவகர் என கூற ஆரம்பித்தார். இதன் காரணமாக விக்ரமனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி