ஆப்நகரம்

பிக் பாஸ் 5ல் இருந்து நாடியா சேங் வெளியேற்றம்: அவர் சொன்ன கதை எல்லாம் பொய்யா?

பிக் பாஸ் 5ல் இருந்து நாடியா முதல் ஆளாக எலிமினேட் ஆகி இருக்கிறார்.

Samayam Tamil 16 Oct 2021, 9:23 pm
இந்த வாரம் எலிமினேட் ஆன நாடியா சேங். அவர் பிக் பாஸ் வீட்டில் சொன்ன கதை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Samayam Tamil first elimination from bigg boss 5 tamil house nadia chang eliminated
பிக் பாஸ் 5ல் இருந்து நாடியா சேங் வெளியேற்றம்: அவர் சொன்ன கதை எல்லாம் பொய்யா?


நாடியா சேங் எலிமினேஷன்

பிக் பாஸ் 5 வீட்டில் இருந்து முதலில் எலிமினேட் ஆகி வெளியேறப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் பெரிதாக இருந்த நிலையில் தற்போது அதற்காக பதில் கிடைத்துவிட்டது.

நாடியா சேங் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மலேசியாவை சேர்ந்த மாடல் மற்றும் டப்ஸ்மாஷ் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடியா கடந்த வாரம் இமான் அண்ணாச்சி கதைக்கு டிஸ்லைக் கொடுத்த நிலையில் அதற்கு காரணம் கேட்டபோது, காரணம் எல்லாம் சொல்ல முடியாது என திமிராக பதில் கூறினார். அதனால் அவரை அப்போது இருந்தே நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் இந்த வாரம் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு குறைந்த அளவு தான் வாக்குகள் கிடைத்திருக்கும் என தெரிகிறது.

சொன்ன கதை பொய்யா?

மேலும் சில தினங்களுக்கு முன்பு நாடியா பிக் பாஸ் வீட்டில் அவரது கதையை சொன்னார். தான் 14 வயதில் இருந்தே வேலை தான் செய்துவந்தேன், அம்மா அதிகம் ஸ்ட்ரிக்ட், போலீசிடம் அடி வாங்க வைத்தார் என நாடியா குற்றம்சாட்டி இருந்தார். அதன் பின் கணவர் தான் வந்து என்னை அம்மாவிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் எனவும் நாடியா கூறி இருந்தார்,

அவர் சொன்ன கதை பொய்யானது என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 14 வயதில் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு யாருமே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். மேலும் அவர் அம்மாவின் போட்டோவை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவர் தான் ரோல் மாடல் என கூறி இருந்த பதிவும் வைரல் ஆனது. பிக் பாஸ் வீட்டில் ஏன் அப்படியே மாற்றி பேசினார் நாடியா எனவும் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

ஆதாரத்துடன் நாடியாவை தாக்கி பதிவிடும் நெட்டிசன்கள்

இதை எதிர்பார்க்கல.. நெட்டிசன்கள் கருத்து

அடுத்த செய்தி