ஆப்நகரம்

ஏன் கையை அறுத்தேன்: மதுமிதா விளக்கம்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர் மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. தான் ஏன் கையை அறுத்துக் கொண்டேன் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Sep 2019, 5:23 pm
பிக் பாஸ் சீசன் 3 இந்த முறை மிகவும் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் தமிழகத்தில் எங்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு உள்ளது. இந்த சீசன் 3ல் சர்ச்சைகள் அதிகமாக வெளியில் பரவி வருகிறது.
Samayam Tamil Madhumitha


மதுமிதா கையை அறுத்துக்கொண்டது பற்றி முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். அதில் hello app விளம்பரத்திற்காக வாட்ஸப் ஸ்டேட்டஸ் போன்று ஒரு வீடியோ பதிவிடச் சொல்லி பிக் பாஸில் சொன்னார்கள். சுதந்திரத்தினத்தன்று தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை மனதில் வைத்து ஒரு வரியில் ஒரு கவிதை கூறினேன். வருண பகவானும் கர்நாடகத்தைச் சேர்ந்தவரோ மழை வடிவில் கூட நீர் தர மறுக்கிறாரே எனக் கூறினேன். இதில் எனக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை ஆனால் இதனை அந்த எட்டுப் பேரும் அரசியலாக்கிவிட்டனர்.

வெளியேறிய சேரன்: கண்ணீர் விட்டு கதறி அழுத லோஸ்லியா!

Episode 76 Highlights: முதன் முதலில் ரகசிய அறையில் சேரன்: எத்தனை நாட்கள்?

பிக் பாஸிடமிருந்து அரசியல் கூடாது எனும் அறிவிப்பு வரவே, அந்த எட்டு பேரும் என்னை திட்ட ஆரம்பித்தனர். அதை தாங்க முடியாமல எனது கருத்தின் நியாயத்திற்கு வலு சேர்க்கவே நான் கையை அறுத்துக் கொண்டேன். சேரனும், கஸ்தூரியும் தவிர மற்ற அனைவரும் அதை கிண்டலாக பார்த்து சிரித்தனர் என்று கூறியுள்ளார்.

அப்பா சேரனுக்குப் பதிலாக வெளியேற துடித்த பாசக்கார மகள் லோஸ்லியா!

பிக் பாஸின் இந்த சீசனில் மீரா மிதுன், சேரன் விவகாரம், சரவணன், வனிதா மீண்டும் போட்டியாளராக அனுப்பப்பட்டது. மதுமிதா கையை அறுத்துக்கொண்டது என தொடர்ந்து பல சர்ச்சைகள் பிக் பாஸை சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி