ஆப்நகரம்

5 லட்சத்துடன் வெளியேறும் முக்கிய போட்டியாளர்.. அனைவரும் ஷாக்

பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் பண பெட்டியை எடுத்துக்கொண்டு கேபி வெளியேற முடிவெடுத்து இருக்கிறார். அவரது இந்த முடிவு அனைவர்க்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Samayam Tamil 14 Jan 2021, 3:41 pm

ஹைலைட்ஸ்:

  • 5 லட்சத்துடன் வெளியேற முடிவெடுத்த கேபி
  • காரணத்தை கேட்டு ரியோ அவருடன் வாக்குவாதம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Gaby decides to quit Bigg Boss 4 with 5 Lakhs cash
பிக் பாஸ் 4 கிராண்ட் finaleவுக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் பண பெட்டிகளை வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார். அதனை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு இப்போதே வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதலில் ஒரு லட்சம் வந்த நிலையில், அதை யாரும் எடுக்காத காரணத்தால், அதனை தொடர்ந்து இறுதியில் 5 லட்சம் ருபாய் வந்திருக்கிறது.

யார் இதை எடுப்பார்கள் என அனைவரும் நின்று யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில் கேப்ரியலா 5 லட்சம் ருபாய் பண பெட்டியை கையில் எடுத்து தான் வெளியேறுவதாக அறிவிக்கிறார்.

சீரியஸாக தான் இதை செய்கிறாயா என சனம் ஷெட்டி கேள்வி கேட்கிறார். கேபி எடுத்த இந்த முடிவை தடுத்த ரியோ, 'நீ போவதற்கு காரணத்தை சொல்லு' என கேட்கிறார். 'எனக்கு தெரியும்' என கேபி பதில் சொல்லி இருக்கிறார்.

'நீ போனால் அம்மாவை மட்டும் தான் பார்க்கணும். நான் போனால் பார்க்க வேண்டியவங்க நெறைய பேர்' என ரியோ சொல்கிறார். அதற்கு கேபி கண்ணீர் விட்டுக்கொண்டே அங்கிருந்து விலகி செல்கிறார்.


கேபி தன் முடிவை மாற்றிக்கொண்டாரா இல்லை வெளியேறிவிட்டாரா எனபது இன்று இரவு ஷோ ஒளிபரப்பானால் தான் தெரியவரும்.

அடுத்த செய்தி