ஆப்நகரம்

Tamil Bigg Boss 3: என்ன சொல்றீங்க? நான் பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் இருக்கேனா - அப்சரா ரெட்டி விளக்கம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து தொகுப்பாளினியும், அரசியல்வாதியுமான அப்சரா ரெட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 3 Jun 2019, 3:39 pm
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழகத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரு சீசன்கள் முடிந்த நிலையில், மூன்றாவது சீசனுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Apsara-Reddy-Images-1


ஒரு வீட்டில் 15 பிரபலங்கள் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களில் மக்களின் வாக்குகள் அடிப்படையில், ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவர். இறுதியில் அதிக மதிப்பெண்களுடன் முன்னிலையில் இருப்பவரே வெற்றியாளர் ஆவார்.

இவருக்கு பல லட்ச ரூபாய் பரிசுகள் வழங்கப்படும். முதல் இரு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனே, மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க உள்ளார். வரும் 23ஆம் தேதி முதல், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான நட்சத்திரங்கள் யார் என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியும், காங்கிரஸ் கட்சி தலைவருமான திருநங்கை அப்சரா ரெட்டி பங்கேற்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதாக வெளியான செய்திகள் தவறானது. முதல் சீசனில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நான் மறுத்து விட்டேன்.

மூன்றாவது சீசனிலும் பங்கேற்கும் எண்ணம் இல்லை. டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் எண்ணம் இல்லை. சில நம்பகத்தகுந்த செய்தி நிறுவனங்கள் கூட, இதுகுறித்து தவறாக செய்திகளை பரப்பி வருகின்றன. அதை நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி