ஆப்நகரம்

சாமி ஆளவிடுங்க…இங்க எல்லாம் என்னால் இருக்க முடியாது: சரவணன்!

பிக் பாஸ் 3 வீட்டில் நடப்பதை மக்களால் கூட பார்க்க முடியாத நிலை இருக்கும் போது சரவணன் என்னால் இங்கு இருக்க முடியாது என்று கேமரா முன்பு நின்று தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Jul 2019, 11:30 pm
வழக்கத்திற்கு மாறாக இன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டை சச்சரவுடன் தான் தொடங்கியது. இதில், மீரா மிதுன், முகென் ராவ் இருவரும் தங்களது நட்புறவை பற்றி பேசிக்கொண்டிருக்கையில், இதனைக் கேட்ட சாக்‌ஷி, அபிராமி அண்ட்டீமிடம் வத்தி வைத்துள்ளார். இதில் கடுப்பான அபிராமி முகென் ராவ், என்னுடைய நண்பன். அவன் கூட நான் பேசுவேன். ஒரு வேலை நான் அவனை காதலிக்கிறேன் என்று நினைத்தால் அதனை அவனிடம் சொல்லிவிடுவேன். இது எங்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனை. எங்களுக்குள் நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம். மற்றவர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil Saravanan


இதையடுத்து, சாக்‌ஷி, மற்ற போட்டியாளர்கள் அனைவரிடம் நாங்கள், உங்களை யாரிடமாவது பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கிறோமா? என்று கேட்டுள்ளார். ஒவ்வொருவராக கேட்டு முடித்து பின்னர் மதுமிதாவிடம் கேட்டுள்ளார். அப்போது ஆரம்பித்தது வாக்குவாதம். இதில், யாரெல்லாம் இருந்தார்கள் என்றால், மதுமிதா, வனிதா, சாக்‌ஷி, அபிராமி, ஷெரின். ஆனால், இவர்கள் பேசுவதையெல்லாம், சேரன், சரவணன், சாண்டி, கவின், மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, தர்ஷன் ஆகியோர் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒருவழியாக வாக்குவாதம் முடிய, சரவணன் கேமரா முன்பாக வந்து சாமி என்னால், இங்கு இருக்க முடியாது. என்னை வெளியில் அனுப்பிவிட்டு, எனக்குப் பதிலாக வேறு யாரையாவது கொண்டு வாங்க என்று சரவணன் புலம்பித் தள்ளியுள்ளார். இவரைத் தொடர்ந்து மதுமிதாவும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஆம், எனக்கு எனது கணவரை பார்க்கவேண்டும், அம்மாவை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி