ஆப்நகரம்

சர்வாதிகாரம் பண்ணாத.. இமான் பேச்சால் கண்ணீர் விட்ட இசைவாணி

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் இசைவாணிக்கு சில பவர் வழங்கப்பட்ட இருக்கிறது. வீட்டில் இருக்கும் எல்லோரையும் வேலை வாங்கலாம் என பிக் பாஸ் சொன்ன நிலையில் இமான் அண்ணாச்சி அவருடன் வாக்குவாதம் செய்கிறார்.

Samayam Tamil 29 Oct 2021, 11:34 am
நீ சர்வாதிகாரி போல நடந்துகொள்கிறாய் என இமான் அண்ணாச்சி இசைவாணியை பார்த்து கேட்கிறார், அதனால் அவர் கண்ணீர் விட்டு அழுகிறார்.
Samayam Tamil imman annachi criticize isaivani for being rude she cries in bathroom
சர்வாதிகாரம் பண்ணாத.. இமான் பேச்சால் கண்ணீர் விட்ட இசைவாணி


இசைவாணி

இது பஞ்சபூதங்களின் ஒன்றான நெருப்பு வாரம் என சொல்லி நெருப்பு காயின் வைத்திருக்கும் இசைவாணிக்கு கிட்சன் மற்றும் வீட்டின் முழு கண்ட்ரோல் தருவதாக பிக் பாஸ் சொல்கிறார். அவர் தான் கிச்சனில் என்ன நடக்க வேண்டும், யார் என்ன சமைக்க வேண்டும் உட்பட அனைத்தையும் கண்ட்ரோல் செய்ய வேண்டும்.

தனக்கு வேண்டிய பணிவிடைகளை மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை வைத்து தான் செய்துகொள்ள வேண்டும் என பிக் பாஸ் கூறினார்.

சர்வாதிகாரம் பண்ணாத

இசைவாணி தற்போது தனது பவரை பயன்படுத்தி சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார். அதை மற்றவர்களிடம் வேலை சொல்லும் விதம் rude ஆக இருக்கிறது என இமான் அண்ணாச்சி புகார் கூறுகிறார். அதே கருத்தை தான் அக்ஷரா மற்றும் தாமரை இருவரும் கூறுகின்றனர்.

நீ சர்வாதிகாரம் பண்றமா என அண்ணாச்சி முகத்திற்க்கு நேராகவே கூறிவிடுகிறார். அதை கேட்டு அதிர்ச்சி ஆகும் இசைவாணி பாத்ரூமுக்கு சென்று கதறி கதறி அழுகிறார்.

நான் சொல்லிட்டேன், மத்தவங்க சொல்லல..

அதன் பின் மற்ற போட்டியாளர்கள் இசைவாணியை சமாதானப்படுத்த பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் இமான் நான் உன் மீது இருக்கும் பாசத்தால் முகத்திற்க்கு நேராக அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.

நான் நேராக சொல்லிட்டேன், மத்தவங்க அதை சொல்லாமல் மனதில் வைத்திருக்கிறார்கள் அவ்ளோ தான் என கூறுகிறார்.

அடுத்த செய்தி