ஆப்நகரம்

Bigg Boss Azeem: வெற்றியில் முறைகேடு, கொலை மிரட்டல்.. பிக்பாஸ் அசீம் மீது பரபரப்பு புகார்.!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமின் நண்பர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பிரபல யூடிப்பர் ஜோ மைக்கேல் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 5 May 2023, 8:43 am
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த சீசனின் வின்னரான அசீமின் வெற்றியில் முறைகேடு இருப்பதாக பிரபல யூடிப்பர் ஜோ மைக்கேல் ஆர்டிஐ யில் மனு அளித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் மைக்கேல்.
Samayam Tamil அசீம்
அசீம்


பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் மெட்டி ஒழி சீரியல் நடிகை சாந்தி, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், அசல் கோலார், ஜிபி முத்து, செரீனா, ராம், ஆயிஷா, குயின்ஸி, ஜனனி, தனலட்சுமி, ஏடிகே, ரச்சிதா மகாலட்சுமி, கதிரவன், மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன், விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த சீசனில் விக்ரமன், அசீம், ஷிவின் மூவரும் இறுதிவரை முன்னேறினர். விக்ரமன் டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றார். விக்ரமன் ரன்னர் ஆனார். அசீமின் வெற்றி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. பிக்பாஸில் பலமுறை நாமினேஷன் செய்யப்பட்டு, கமலால் அதிகம் விமர்சிக்கப்பட்ட அசீம் டைட்டில் வென்றது எப்படி என பலரும் கேள்வி எழுப்பினர்.

பாக்கியலட்சுமி சீரியல்: வீட்டை விட்டு கிளம்ப சொன்ன கோபி.. கொந்தளித்த ராதிகா: வெடித்த சண்டை..!

இந்நிலையில் அசீம் வெற்றியில் முறைகேடு இருப்பதாக பிரபல யூடிப்பர் ஜோ மைக்கேல் ஆர்டிஐயில் மனு அளித்து தகவல் கேட்டிருந்தார். இந்த மனுவை திருப்பி பெற கூறி அசீம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஜோ மைக்கேல் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் உள்ள இந்தியன் அறக்கட்டளையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அசீமின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த மனுவை திருப்பி பெறக்கூறி அசீமின் நண்பர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், மொபைல் போன் வழியாக தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜோ மைக்கேல். பிக்பாஸ் டைட்டில் வின்னர் மீது அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Pandian Stores: பணத்துக்காக அலையும் கண்ணன்.. அசிங்கப்படுத்தும் ஐஸ்வர்யா: கதிர் எடுத்த முடிவு.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி