ஆப்நகரம்

சஸ்பென்ஸ் வைத்த கமல்; பிழிய பிழிய அழுத மோகன் வைத்யா!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய நிகழ்வுகள் என்னென்ன எனப் பார்ப்போமா?

Samayam Tamil 13 Jul 2019, 11:06 pm
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார்.
Samayam Tamil mohan-vaidya-meera-mithun


சொடக்கு மேல சொடக்கு போடுது பாட்டுடன் துவங்கியது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி. இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பள்ளி ஆசிரியர் போல அனைவருக்கும் பாடம் நடத்தினார்.

சனி, ஞாயிறுகளில் கமல் திரையில் தோன்றி அந்த வாரத்தில் நடந்த பிரச்னைகளை அலசி பிழிந்த காயப்போட்டு பின்னர் அனைவருக்கும் அறிவுரை கூறுவது வழக்கம். அவ்வகையில் தர்ஷன் - வனிதா சண்டை குறித்து கேட்டறிந்தார்.

’நான் வனிதா அக்காவை மரியாதையாகத் தான் பேசினேன். அவர்தான் என்னை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்றவன் நீ என்றார்’ என தர்ஷன் தன் பக்க நியாயத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து கமல் வனிதாவிடம் விளக்கம் கேட்டார். அதற்கு வயதில் சிறியவன் என்பதான் அவ்வாறு கூறினேன் என்றார்.

பின்னர் பாரதியாரின் கவிதை ஒன்றினை மேற்கோள் காட்டிய கமல், ’நெருப்பில் குழந்தை, பெரியது என்றெல்லாம் இல்லை. சிறு பொறி ஒன்று போதும், காட்டை கொளுத்த. அதுபோல யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது’ என்றார்.

லோலிஷா தன் கொஞ்சும் இலங்கைத் தமிழில் தான் செல்லமான வளர்த்த மைனா இறந்தது குறித்து நிஜ சம்பவம் ஒன்றை விவரித்தார். இதிலிருந்து அன்பின் மகிமையை நாம் அனைவரும் உணர வேண்டும் எனக் கூறினார் கமல்.

சாண்டி மாஸ்டார் தானே வரி எழுதி கமலை போற்றி ’அண்ணாத்த ஆடுறார்’ பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி, ஆடினார். கமல் அவரைப் பாராட்டினார்.

மோகன் வைத்யா எலிமினேட் ஆகவுள்ளதாக கமல் ஒரு சிறு நாடகம் செய்ய, அவர் அனைவைரையும் கட்டிப்பிடித்து பிழிய பிழிய அழுதார். பின்னர் நீங்கள் எலிமினேட் ஆகவில்லை என கமல் கூறினார். ஆதற்கு வைத்யா நா தழுதழுக்க கமலுக்கு நன்றி கூறினார்.

அடுத்த செய்தி