ஆப்நகரம்

Episode 72 Highlights: பிக் பாஸ் வீட்டில் மன்னிப்பு, காதலுக்குரிய மதிப்பு இழக்கப்படுகிறது: ஷெரின்!

இன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வழக்கத்திற்கு மாறாக ஒருவருக்கொருவர் பொறாமையால் குற்றம்சாட்டும் விதமாக அமைந்துள்ளது.

Samayam Tamil 5 Sep 2019, 7:30 am
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு வாரம் கலகலப்பாகவும், ஒருவாரம் சண்டை சச்சரவாகவும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இதற்கிடையில், காதலுக்காக போராடுவதும், அதனை தடுக்க முற்படுவதும் தான் பெரும்பாலும், வீட்டில் அரங்கேறுகிறது.
Samayam Tamil vanitha and sherin


இன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அபிராமி, லோஸ்லியா, தர்ஷன், கவின் ஆகியோருக்கு இடையில் விவாதம் நடந்தது. தொடர்ந்து வனிதா, சாக்‌ஷி இருவரும் கவினின் காதல் பற்றி பேசினர். அதனுடன் ஷெரின், தர்ஷன் காதல் பற்றியும் பேச்சு அடிபட்டது. புதிதாக விருந்தினராக வந்த சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா
ஆகியோர் வெளியில் நடந்ததைப் பற்றியும், வனிதா, ஷெரின் ஆகியோர் இங்கு நடந்தது பற்றியும் அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டனர்.

Episode 71 Highlights: சென்டிமென்ட் பேசி லோஸ்லியா காதலை பிரிக்க பார்க்கும் அபிராமி!

ஒருகட்டத்தில் நான் தர்ஷன்கிட்ட பேசினால், கோபப்படுகிறார் வனிதா என்று ஷெரின் சாக்‌ஷியிடம் பேசினார். நான் என்னுடைய போட்டியில்தான் அதிக ஈடுபாடு வைத்திருக்கிறேன் என்றார். இதைத் தொடர்ந்து, மோகன் வைத்யாவும், சேரனிடம் சென்று லோஸ்லியாவிடம் பேசிதைப் பற்றி பேசினார்.

Vanitha: மன்னிப்பு கேட்பதால் யாரும் நல்லங்களா மாற மாட்டார்கள் லோஸ்லியா!

தொடர்ந்து நேற்று நடந்த டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. இதில், வனிதா அணியினர் தயாரித்த 16 தலையணையில், 11 மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. மீதமுள்ள 5 தலையணைகள் ரிஜெக்ட் செய்யப்பட்டது. ஆதலால், இவர்களுக்கு 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதே போன்று லோஸ்லியா அணியினர் தயாரித்த 11 தலையணைகளில் 6 மட்டுமே சரியானதாக தேர்வு செய்யப்பட்டது. இதில், அவர்களுக்கு 9 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Episode 70 Highlights: அழுதது ஒரு குற்றமா? கவின், சாண்டியிடம் வாக்குவாதம் செய்த வனிதா!

இதையடுத்து, போட்டியாளர்களுக்கு இடையில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. இதில், வனிதா, ஷெரின், சேரன், தர்ஷன் ஆகியோர் ஒரு அணியாகவும், சாண்டி, கவின், லோஸ்லியா, முகென் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டனர். அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகியோர் நடுவர்களாக இருந்து, போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு தலைப்பாக கொடுத்தனர். அவர்கள் கொடுக்கும் தலைப்பிற்கு ஏற்றவாறு வனிதா அணியினர் எதிராகவும், கவின் அணியினர் ஆதரவாகவும் பேசினர்.

3 விதமான தலைப்பு கொடுக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில், மன்னிப்பு என்ற சொல்லிற்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்று விவாதத்தின் முடிவில், வனிதா அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி