ஆப்நகரம்

சாண்டியை வச்சு செஞ்ச கமல்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் நடந்தவற்றை வைத்து கமல் ஹாசன் சாண்டியிடம் கேள்விகள் எழுப்பினார். ஆனால், அவரால், எந்த பதிலும் செய்யமுடியவில்லை.

Samayam Tamil 23 Sep 2019, 6:48 am
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. மாதங்கள், வாரங்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த போட்டியாளர்கள் தற்போது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். என்னதான் பல வருட நண்பர்களாக இருந்தாலும், தனது நண்பருக்கு ஒன்னு என்றால், அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் சாண்டியிடம் கமல் ஹாசன் கேள்விகள் எழுப்பினார்.
Samayam Tamil Sandy Kavin


கடந்த வாரம் நடந்த போட்டியின் போது லோஸ்லியாவிடம் மோதி, அவரை கீழே தள்ளிவிட்ட சாண்டியிடம் கவின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு கவின், சாண்டியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதையெல்லாம் வைத்து கேள்வி எழுப்பிய கமலிடம் சாண்டியால் பேசமுடியவில்லை. அப்போதுதான் கவின், அவருக்கு உதவி செய்துள்ளார். ஏன், அதற்கு அவ்வாறு நடந்து கொண்டார் என்பதையும், அதன் பிறகு அவர் கஷ்டப்பட்டதையும் குறிப்பிட்டு கூறினார். மேலும், பிக் பாஸிடம் சென்று கண்ணீர்விட்டு அழுததையும் கவின், நண்பனுக்காக தெரிவித்துள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியில், பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கான கோல்டன் டிக்கெட் டாஸ்க்கில் இந்த வாரம் முழுவதும் நடந்த போட்டியை சிறப்பாக செய்த முதலிடம் பிடித்த முகெனுக்கு கோல்டன் டிக்கெட் பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து, எந்தப் போட்டியும் இல்லாமல் முகென் நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார். அவருக்கு எலிமினேஷன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், முகென் இறுதிப் போட்டிக்கு சென்றதை தொடர்ந்து அவர் வெற்றிபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே இந்த டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்றும் பலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி