ஆப்நகரம்

Episode 3 Highlights: மோகன் வைத்யா, ரேஷ்மாவின் தாங்க முடியாத வலி; கண்ணீர் கடலில் மூழ்கிய பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ன் வீட்டில் மூன்றாவது நாள் என்ன நடந்தது என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 27 Jun 2019, 2:36 pm
"மெர்சல்” படத்தில் இடம்பெற்ற “அடிச்சு காலி பண்ணும்” பாடல் ஒலிபரப்ப, போட்டியாளர்கள் உற்சாகமாக நடனமாடி எழுந்தனர். இதையடுத்து தபால் பாக்ஸிற்கான பெல் அடித்தது. அதில் மோகன் வைத்யா வீட்டில் உள்ள அனைவருக்கும் குத்து டான்ஸ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மோகன் வைத்யா நடனம் கற்றுக் கொடுக்கிறார்.
Samayam Tamil Mohan Vaidya


அனைவரும் குஷியாக ஆடிக் களிக்கின்றனர். இதையடுத்து மதுமிதா தனது கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். பின்னர் சமையலறையில் கீரை கப்பை எடுத்து வைக்கவில்லை என்று அபிராமி வீட்டில் உள்ளவர்களிடம் கோபப்படுகிறார். அப்போது மீராவிற்கும், அபிராமிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது உன்கிட்ட பேசப் பிடிக்கவில்லை என்று அபிராமி கிளம்பிச் செல்கிறார்.

கீரை டப்பாவால் பிக் பாஸ் வீட்டில் செம சண்டை; அழுது புரண்ட மீரா மிதுன், அபிராமி!

இதற்கு தீர்வு காணும் வகையில், தலைவர் வனிதா மீரா நாட்டாமை செய்ய வருகிறார். இந்த வார்த்தை போர் சிறிது நேரம் நீண்டு செல்ல, பின்னர் கலைந்து செல்கின்றனர். இந்த விவகாரத்தில் அபிராமி மற்றும் மீரா மிதுன் மனமுடைந்து அழத் தொடங்குகின்றனர். மீராவை பாத்திமா பாபுவும், அபிராமியை வனிதாவும் சமாதானம் செய்கின்றனர். இந்தப் பிரச்சனை அடுத்த சில நிமிடங்களுக்கு நீள்கிறது.

அபிராமியை சமாதானப்படுத்த கவின் வருகை புரிகிறார். இது மிகவும் மகிழ்ச்சிகரமான பொழுதான கழிகிறது. இதனைத் தொடர்ந்து, சொகுசு பட்ஜெட்டிற்கான அறிவிப்பு வருகிறது. அதில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பிக் பாஸ் சொல்லும் விஷயத்தை செயல்படுத்த தொடங்குகின்றனர். இதற்காக வைக்கப்பட்டிருந்த சீட்டை எடுக்க, முதலில் மோகன் வைத்யா அழைக்கப்படுகிறார்.

அவர் தனக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பேச வேண்டும் என்று சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர், தங்கள் வாழ்வில் ஏற்பட்ட இழப்பு குறித்து மோகன் வைத்யா கூறுகிறார். தனது காது கேட்காத, வாய் பேச முடியாத மனைவியின் இறப்பு குறித்து பேசுகிறார்.

அவர் கண்ணீரில் கரைய, பிக் பாஸ் குடும்பமும் சோகத்தில் மூழ்கிறது. இதையடுத்து தன்னை நீண்ட நேரம் சிரிக்க வைத்ததற்கு சாண்டிக்கு மோகன் வைத்யா நன்றி சொல்கிறார்.

இதையடுத்து ரேஷ்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர் தனது வாழ்வின் சோகத்தை விளக்குகிறார். தன்னுடைய இரு கணவன்மார்களால் வாழ்க்கை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டது என்பதை கண்ணீர் கடலுடன் விளக்குகிறார். அவரை அனைவரும் தேற்றுகின்றனர்.

பிக் பாஸ் முதல் நாள் அப்டேட்,

பிக் பாஸ் முதல் இரண்டாவது நாள் அப்டேட்

பின்னர் அபிராமி அழைக்கப்பட்டு, மறக்க முடியாத விஷயம் குறித்து பேசுகிறார். அவர் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார். அவரைத் தொடர்ந்து ஷெரின் தன்னுடைய யாருக்கும் தெரியாத விஷயம் குறித்து பேசுகிறார்.

அடுத்த செய்தி