ஆப்நகரம்

Bigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. கமல் ஆதங்கம்

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த கமல்ஹாசன் "யாமறிந்த சீசனிலே இச்சீசனை போல் சச்சரவு பார்த்ததே இல்லை" என வந்தவுடனேயே ஹவுஸ்மேட்ஸை பற்றி தெரிவித்து இருக்கிறார்.

Samayam Tamil 25 Oct 2020, 1:14 am
பிக் பாஸ் தொகுப்பாளரான கமல், வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸிடம் கேள்விகளும், அறிவுரைகளும் கூறும் நாளான இன்று பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது.
Samayam Tamil Kamal haasan in Bigg Boss 4


"யாமறிந்த சீசனிலே இச்சீசனை போல் சச்சரவு பார்த்ததே இல்லை" என்று ஆரம்பித்த கமல், நாங்க பார்க்காத சண்டையா? எத்தன பாத்துருக்கோம் என அசட்டையாக இருந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார்கள் இல்லத்தார்கள் என கூறினார்.

இந்த சீசனில் வந்த கன்டெஸ்டன்ட் எல்லாரும் சண்டை போடுவதற்காகவே வீடு எடுத்து ஒத்திகை பார்த்து விட்டு வந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் என்று கமல் கூறினார். கைகலப்புக்கு பார்டர் லடாக் வரை சென்று விட்டு திரும்பிவிட்டார்கள் என்றும் நக்கலடித்தார் கமல்.

வாரம் முழுவதும் வீடே வெடித்து சிதறிக் கொண்டே இருந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் அமைதிப் பூங்காவாக இருக்கப் போகிறதா என்ன? என கூறியதும் அப்படியென்றால் வெள்ளிக்கிழமையும் ஏதோ பிரச்சினை நடந்திருக்குமோ என ஆடியன்ஸை யோசிக்க வைத்தது.

வீட்டிற்குள் நடந்த சச்சரவை பற்றி கமல் கூறியவுடன் அட! ஆமாம் என பார்வையாளர்கள் சொல்லுமளவுக்கு பிரச்சனை நடந்திருக்கிறது. முதல் வாரத்தில் இருந்தே சின்ன, சின்ன பிரச்சினைகளாக ஆரம்பித்து நாட்கள் ஆக ஆக பெரியதாக வெடித்துக் கொண்டுதான் இருந்தது,

அதிலும் இந்த வாரம் சனம், சுரேஷ் சக்கரவர்த்தி இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படியென்றால் இன்று பிரச்சினைகளை பேசியும், அதை தீர்த்தும் வைக்கப் போகிறார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எப்பொழுதும் ஹவுஸ்மேட்ஸின் தவறுகளை மறைமுகமாகவே நன்றகவே சுட்டிக் காட்டுகிறார் கமல்.

அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் கன்டெஸ்டண்டுகளும் நிறைய பதில்கள் கிடைக்கும் என நினைக்கிறார்கள். யார் சரி? யார் தவறு? என்பதை கமல் சொல்வதை வைத்து கெஸ் செய்து அடுத்த வாரத்திற்கு ரெடியாகி கொள்ள தயாராக இருந்தார்கள்.

கமல் இன்று பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லி சமரசம் செய்து வைப்பாரா ? கன்டெஸ்டண்டுகள் எதிர்பார்ப்பது போல் துருப்புச் சீட்டு எதுவும் கிடைக்குமா? என பார்வையாளர்கள் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி