ஆப்நகரம்

'ஊளையிடுவதை இவ்வளவு தட்டி கொடுக்க வேண்டாமே?': வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியால் கடுப்பான கஸ்தூரி!

வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியால் கடுப்பாகி கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

Samayam Tamil 14 Oct 2019, 4:47 pm
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சி முடிந்தாலும் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துப் பேசி கொண்டு தான் இருக்கின்றனர்.
Samayam Tamil kasthuri tweet


கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசன் சற்று சுவாரசியமாக இருந்தது. அன்பு, காதல், சண்டை, நட்பு என்று கலவையாக இருந்தது. அதிலும் குறிப்பாக சாண்டி, முகென், கவின், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் வீ ஆர் த பாய்ஸ் என்ற டேக்லைனோடு வலம் வந்தனர். அது மட்டுமின்றி ஒரே மாதிரியான டீ ஷர்ட்டை அணிந்திருந்ததோடு தங்களுக்கு என ஒரு பாடலையும் அமைத்துக் கெத்து காட்டி வந்தனர்.

#plantforkalam: தல, தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்!

இந்த நிலையில் நேற்று வீ ஆர் தி பாய்ஸ் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அதில் லாஸ்லியாவை தவிர அந்த கேங்கை சேர்ந்த மற்ற அனைவரும் பங்கேற்றனர். அதில் பெண் போட்டியாளர்களின் முகம் பதியப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்தபடி அனைவரும் பேசிக் காண்பித்தனர். அப்போது சாண்டி கஸ்தூரி சமைத்த பொங்கல் குறித்து விமர்சனம் செய்தார்.

அதை கண்ட கஸ்தூரி கடுப்பாகி 'இது ரொம்ப ரொம்ப மோசமான ரசனை. விஜய் டிவி தங்களுக்குப் பிடித்த மானவர்களை புரமோட் செய்வதில் நச்சுத்தனமான போலி ஆண்மையை புரமோட் செய்திருக்கிறது. ?


நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே?சிறந்த தரங்களை அமைப்பதற்கு நம் இளைஞர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்' என்று கூறியுள்ளார். இதை கண்ட வி ஆர் த பாய்ஸ் ரசிகர்கள் கஸ்தூரியைக் கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அடுத்த செய்தி