பிக்பாஸ் போட்டியாளர் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கள் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் ஏற்கனவே விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதூன். அழகிப்போட்டி நடத்தப்போவதாக கூறி பல பெண்களிடம் மோசடி செய்ததாக காவல்நிலையங்களில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இவர் வெற்றிப் பெற்ற மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்பப் பெறப்பட்டது. இது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது. அதை பயன்படுத்திக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்புக் குழு, அவரை உடனே பிக்பாஸ் வீட்டுக்குள் 16வது போட்டியாளராக உள்ளே அனுப்பியது.
வனிதா எலிமினேட்டான பிறகு தான் அருமை புரியுது: கதறும் நெட்டிசன்கள்
முன்னதாகவே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்ட சாக்ஷி, அபிராமி ஆகியோருக்கு இவருடைய வருகை எரிச்சலூட்டியது. இதனால் அவர்கள் இருவரும் மீராவுடன் நடந்து கொண்ட விதம், மீரா மீது பார்வையாளர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Episode 22 Highlights: எலிமினேஷனுக்கு வந்த அபிராமி- கவினை அண்ணாவாக்கிய லோஸ்லியா..!
இது எல்லாம் சிறிது நாட்களுக்கு தான். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அவருடைய நடவடிக்கைகள் மூலம், மீராவின் உண்மை முகம் தெரிய வந்தது. மற்ற போட்டியாளர்கள் அறிவுரை வழங்கினாலும், அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர் எப்போதும் நடந்துக்கொண்டது கிடையாது.
அந்த வீட்டுக்குள் அவருக்கு ஆதரவாக இருந்தவர் முன்னாள் போட்டியாளர் ஃபாத்திமா பாபு மட்டுமே. ஆனால் சிறுது நாட்களில் அவரிடமும் பகைமை பாராட்டினார் மீரா. அதை தொடர்ந்து சேரன், மதுமிதா, லோஸ்லியா ஆகியோருடன் வரிசையாக அவருக்கு பிரச்னைகள் முளைத்தன. தர்ஷன், முகின் ராவ் போன்றோரையும் அவர் விட்டு வைக்கவில்லை.
வனிதாவுக்கு பதில் இவரா..? பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பரைஸ்..!
குறிப்பாக தர்ஷனுடன் காதல் என அவரை ஒரு வழியாக்கி வருகிறார் மீரா. வனிதா எலிமினேட் செய்யப்பட்ட பிறகு, இந்த நிகழ்வு தான் பிக்பாஸ் வீட்டில் பிரதான கருப்பொருளாக இருந்து வருகிறது. தர்ஷன் விருப்பமில்லை என்று கூறியும் கட்டாயப்படுத்துவதோடு தொடர்ந்து தனது காதல் குறித்து பேசி அவரை டார்ச்சர் செய்து வருகிறார் மீரா.
தற்போது மீரா மிதூன் ஏற்கனவே விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். நடனப் போட்டியில் கலந்து கொண்ட மீரா, சில வாரங்களிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதூன். அழகிப்போட்டி நடத்தப்போவதாக கூறி பல பெண்களிடம் மோசடி செய்ததாக காவல்நிலையங்களில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இவர் வெற்றிப் பெற்ற மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்பப் பெறப்பட்டது. இது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது. அதை பயன்படுத்திக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்புக் குழு, அவரை உடனே பிக்பாஸ் வீட்டுக்குள் 16வது போட்டியாளராக உள்ளே அனுப்பியது.
வனிதா எலிமினேட்டான பிறகு தான் அருமை புரியுது: கதறும் நெட்டிசன்கள்
முன்னதாகவே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்ட சாக்ஷி, அபிராமி ஆகியோருக்கு இவருடைய வருகை எரிச்சலூட்டியது. இதனால் அவர்கள் இருவரும் மீராவுடன் நடந்து கொண்ட விதம், மீரா மீது பார்வையாளர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Episode 22 Highlights: எலிமினேஷனுக்கு வந்த அபிராமி- கவினை அண்ணாவாக்கிய லோஸ்லியா..!
இது எல்லாம் சிறிது நாட்களுக்கு தான். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அவருடைய நடவடிக்கைகள் மூலம், மீராவின் உண்மை முகம் தெரிய வந்தது. மற்ற போட்டியாளர்கள் அறிவுரை வழங்கினாலும், அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர் எப்போதும் நடந்துக்கொண்டது கிடையாது.
அந்த வீட்டுக்குள் அவருக்கு ஆதரவாக இருந்தவர் முன்னாள் போட்டியாளர் ஃபாத்திமா பாபு மட்டுமே. ஆனால் சிறுது நாட்களில் அவரிடமும் பகைமை பாராட்டினார் மீரா. அதை தொடர்ந்து சேரன், மதுமிதா, லோஸ்லியா ஆகியோருடன் வரிசையாக அவருக்கு பிரச்னைகள் முளைத்தன. தர்ஷன், முகின் ராவ் போன்றோரையும் அவர் விட்டு வைக்கவில்லை.
வனிதாவுக்கு பதில் இவரா..? பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பரைஸ்..!
குறிப்பாக தர்ஷனுடன் காதல் என அவரை ஒரு வழியாக்கி வருகிறார் மீரா. வனிதா எலிமினேட் செய்யப்பட்ட பிறகு, இந்த நிகழ்வு தான் பிக்பாஸ் வீட்டில் பிரதான கருப்பொருளாக இருந்து வருகிறது. தர்ஷன் விருப்பமில்லை என்று கூறியும் கட்டாயப்படுத்துவதோடு தொடர்ந்து தனது காதல் குறித்து பேசி அவரை டார்ச்சர் செய்து வருகிறார் மீரா.
தற்போது மீரா மிதூன் ஏற்கனவே விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். நடனப் போட்டியில் கலந்து கொண்ட மீரா, சில வாரங்களிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.