ஆப்நகரம்

பண மோசடி வழக்கு: கவினின் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

பிக் பாஸ் புகழ் கவினின் தாயார் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டுகள சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 31 Aug 2019, 4:29 pm
திருச்சியைச் சேர்ந்தவர் பிக் பாஸ் புகழ் கவின். இவரது தாயார் ராஜலட்சுமி. இவரும், இவரது தாய் தமயந்தி மற்றும் தமயந்தியின் கணவர் அருணகிரி, மகன் சொர்ணராஜன் மற்ற்றும் மருமகள் ராணி ஆகியோர் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை அனுமதியின்றி சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில், கிட்டத்தட்ட 34 பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
Samayam Tamil Tamil Bigg Boss Kavin mother


ஆனால், அவர்கள் கட்டிய பணத்தை அவர்களுக்கு திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்றுத்தரவேண்டும் என்று திருச்சி குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

பிக் பாஸ் காதல் மன்னன் கவின் – லோஸ்லியா காதலை வச்சு செய்யும் சாண்டி!

Episode 65 Highlights: தெருக்கூத்து நடத்தி மக்களுக்கு கருத்து சொன்ன சேரன், வனிதா கிராமத்தினர்!

Kavin: லோஸ்லியா கழுத்தில் கயிறு கட்டிய கவின்: எத்தனை முடிச்சு போட்டாரோ?

இந்த நிலையில், கவினின் தாயார் ராஜலட்சுமி, ராணி, தமயந்தி, சொர்ணராஜன், அருணகிரி ஆகியோர் மீதான குற்றம் நீருபிக்கப்பட்டுள்ளது. இதில், சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில், ராஜலட்சுமி உள்பட 3 பேர் மீது மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின் படி, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் திருச்சி நீதிமன்றம் அதிரசியாக தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கவின் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால், இந்த விவரம் குறித்து அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவினுக்கு தெரிய வந்த பிறகு அவர் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி