பிக் பாஸ் ஷோ ஹிந்தியில் பல வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வந்த நிலையில், கடந்த 2017ல் தான் தமிழில் பிக் பாஸ் ஷோ துவங்கியது. முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்கள் தான் ஓவியா மற்றும் ஆரவ். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகிய நிலையில், ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா ஓப்பனாக தெரிவித்தார்.
ஆனால் ஆரவ் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஆனால் மருத்துவ முத்தம் மட்டும் கொடுத்தார் என்ற விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ஓவியா - ஆரவ் இருவரும் நட்புடன் தான் இருந்து வந்தனர். அவர்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர் என்று கூட வதந்திகள் வந்தது.
ஆனால் இறுதியில் ஆரவ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஹீ என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். அதில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் ஓவியா மட்டும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஓவியா ஒரு லைவ் வீடியோவில் பேசும்போது ஆரவ் திருமணத்தில் பங்கேற்காதது ஏன் என்பது பற்றி பேசி இருக்கிறார். தான் அப்போது கேரளாவில் இருந்ததாகவும், அதனால் தான் லாக் டவுனில் திருமணத்திற்கு வர முடியவில்லை என கூறி இருக்கிறார்.
மேலும் இது பற்றி இனிமேல் எந்த கேள்வியையும் கேட்க வேண்டாம் என தெரிவித்து உள்ளார் ஓவியா.
ஆனால் ஆரவ் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஆனால் மருத்துவ முத்தம் மட்டும் கொடுத்தார் என்ற விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ஓவியா - ஆரவ் இருவரும் நட்புடன் தான் இருந்து வந்தனர். அவர்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர் என்று கூட வதந்திகள் வந்தது.
ஆனால் இறுதியில் ஆரவ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஹீ என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். அதில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் ஓவியா மட்டும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஓவியா ஒரு லைவ் வீடியோவில் பேசும்போது ஆரவ் திருமணத்தில் பங்கேற்காதது ஏன் என்பது பற்றி பேசி இருக்கிறார். தான் அப்போது கேரளாவில் இருந்ததாகவும், அதனால் தான் லாக் டவுனில் திருமணத்திற்கு வர முடியவில்லை என கூறி இருக்கிறார்.
மேலும் இது பற்றி இனிமேல் எந்த கேள்வியையும் கேட்க வேண்டாம் என தெரிவித்து உள்ளார் ஓவியா.