ஆப்நகரம்

சரவணனின் பேச்சுக்கு கை தட்டும் கூட்டம்- பிக்பாஸை கிழித்து தொங்க விட்ட சின்மயி..!

கல்லூரி காலங்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் செல்வேன் என சரவணன் பேசிய போது பிக்பாஸ் பார்வையாளர்கள் கை தட்டி ரசித்தற்கு பாடகி சின்மயி ட்விட்டரில்கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Jul 2019, 9:28 pm
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் உரையாடல் செய்தார் கமல்ஹாசன். அப்போது, சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீரா தெரிவித்த புகாரை அவர் விசாரித்தார்.
Samayam Tamil சரவணன் செய்தது தவறு; அதற்கு என்ன பாராட்டு- சின்மயி காட்டம்
சரவணன் செய்தது தவறு; அதற்கு என்ன பாராட்டு- சின்மயி காட்டம்


அப்போது பேசிய அவர், மீரா போல பேசிக்கொண்டிருந்தால் எந்த பெண்ணும் அரசு பேருந்தில் செல்ல முடியாது. பெண்களை உரச வேண்டும் என்று சிலர் வருபவர்களும் உண்டு என்று கமல் சொன்ன போது, அதை கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.

ஏன் கையை உயர்த்தீனர்கள் என கமல்ஹாசன் அவரிடம் வினவிய போது, நான் கல்லூரிக் காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறினார் சரவணன். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கமல்ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூறினார். அதற்கு பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் கை தட்டி சிரித்தனர்.


சரவணனின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை சரவணன் பேசியது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது. அந்த கூட்டத்தில் இருந்த பெண்களும் தைட்டுகின்றனர். சரவணன் செய்தது பாலியல் சீண்டல் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

அடுத்த செய்தி