ஆப்நகரம்

9 மாத குழந்தை இறந்த சோகம்: பிக் பாஸ் வீட்டில் கதறி கதறி அழுத புஷ்பா!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஒருபுறம் அபிராமி மற்றும் மீரா மிதுன் சண்டை போடும் வீடியோவும், மற்றொரு புறம் ரேஷ்மா தனது வாழ்வில் நடந்த சோக சம்பவம் குறித்து அழுதுக் கொண்டேபேசுவது போன்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Jun 2019, 2:51 pm
டீவி சீரியல்கள் மூலமாக புகழ் பெற்றவர் ரேஷ்மா. இவர் மாடலாகவும் இருந்துள்ளார். சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாப்பாத்திரம்மிகப்பெரிய அளவில் இவரை பிரபலப்படுத்தியது. காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இவருக்கு காதலென்று ஒரு செய்தி பரவியது. அந்த செய்தியை பொய் என மறுத்தவர்.
Samayam Tamil Reshma pasu


எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என குண்டை போட்டார். மீண்டும் கிசுகிசு பரவிய நிலையில் தற்போதுஇவர் பிக் பாஸ் வீட்டுக்குள்போட்சியாளராக நுழைந்திருக்கிறார். இன்றைக்கு வெளியான புரோமோவில் ஒவ்வொருவரும் தங்களுக்கு நடந்த துக்கத்தை பகிர்ந்து கொள்ள இரு போட்டி நடக்கிறது. அதில் தான் ரேஷ்மா இந்த அதிர்ச்சி தகவலை வெளியுட்டுள்ளார். அதாவது, ரேஷ்மாவுக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது.

அதி மட்டுமல்லாமல் 9 மாதம் அவர் கர்ப்பமாக இருந்தபோதே குழந்தை இறந்துள்ளது. இதுவரை வெளியே தெரியாத இந்த விஷயத்தை ரேஷ்மா முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் கூறியிருக்கிறார். இது எல்லோரிடம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தற்போது புரோமோவாக இது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று இரவு ரேஷ்மாவின் வாழ்க்கை நடந்த சோகம் விஜய் டிவிக்கு பெரிய டி.ஆர்.பி யை தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி