ஆப்நகரம்

ஆரி சொன்ன அந்த வார்த்தை.. வீட்டுக்குள் நுழைந்ததும் ஷாக் ஆன ரம்யா பாண்டியன்

பிக் பாஸ் 4 வீட்டுக்குள் ரம்யா பாண்டியன் நுழைந்ததும் நடிகர் ஆரி அவரிடம் சொன்ன விஷயம் அவரை ஷாக் மற்றும் குழப்பமடைய வைத்தது.

Samayam Tamil 5 Oct 2020, 5:49 pm
நடிகை ரம்யா பாண்டியனுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்கு அவர் இணையத்தில் மிகவும் பிரபலமான ஒருவராகவே இருக்கிறார்.
Samayam Tamil Ramya Pandian in Bigg Boss 4


சில திரைப்படங்களில் அவர் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது அவரது மொட்டை மாடி போட்டோ ஷூட் தான். கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த போட்டோக்கள் ஒரே நாளில் இணையத்தில் திடீர் வைரலானது. அதனால் அதிகம் பேசப்படும் நடிகையாக ஒரே நாளில் மாறி விட்டார் ரம்யா பாண்டியன். அதற்குப் பின் பேட்டி, நிகழ்ச்சிகள் என பிஸியாக மாறிய அவர் விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார், தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக அவர் பணியாற்றினார். அதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் 4 வீட்டுக்கு போட்டியாளராக சென்று இருக்கிறார் அவர்.

ரம்யா பாண்டியன் கமல் ஹாசனிடம் பேசிவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் அவரை நடிகர் ஆரி மற்றும் வேல்முருகன் ஆகியோர் வரவேற்றார்கள்.

ரம்யா பாண்டியனை பார்த்ததும் ஆரி சொன்ன முதல் வார்த்தை "எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது" என்பது தான். எதற்கு சம்பந்தமே இல்லாமல் பார்க்கும் முதல் முறையே தன்னிடம் இப்படி கூறுகிறார் என ரம்யா பாண்டியன் ஷாக் ஆகிவிட்டார். ஏன் அவர் அப்படி கூறினார் என கேட்டதற்கு, ரம்யா பாண்டியன் ரசிகர் ஒருவர் ஆரியிடம் அப்படி சொல்லி அனுப்பினாராம். உள்ளே போனதும் ரம்யா பாண்டியன் கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும், நீங்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்லி ஆக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனால் தான் அப்படி கூறியதாக ஆரி விளக்கம் தெரிவித்தார்.

உடனே நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் ரம்யா பாண்டியனை பார்த்து 'எனக்கு ஒரு முறை தான் கல்யாணம் ஆகி இருக்கிறது' என காமெடியாக தெரிவித்து உள்ளார்.

ஒருவேளை ஆரியின் மனைவி தான் அப்படி சொல்லி அனுப்பி இருப்பார்களோ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி