ஆப்நகரம்

Bigg Boss 4 Promo: வெளியில வாடா இப்போ..சுரேஷ் சக்ரவர்த்தியை கண்டபடி திட்டிய சனம் ஷெட்டி

சுரேஷ் சக்ரவர்த்தியா வாடா போடா என மோசமாக பேசி இருக்கிறார் சனம் ஷெட்டி. லேட்டஸ்ட் ப்ரொமோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

Samayam Tamil 21 Oct 2020, 4:07 pm
நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாக ஆகி வருகிறது பிக் பாஸ் ஷோ. இதற்கு முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த நான்காவது சீசனில் போட்டியாளர்கள் இடையே முதல் நாளில் இருந்தே சண்டை சச்சரவு வந்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil Sanam Shetty vs Suresh Chakravarthy


குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டி இடையே உள்ள பிரச்சனை கடந்த சில நாட்களாக அதிகம் நடந்து வரும் நிலையில் அது இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

நேற்றைய டாஸ்கில் சுரேஷ் சக்ரவர்த்தி அரக்கர்கள் டீமிலும், சனம் அரச குடும்பத்திலும் இருந்தனர். இன்று அது அப்படியே தலைகீழாக மாற்றப்பட்டு அணிகள் மாற்றப்பட்டது. சுரேஷ் தற்போது அரச குடும்பத்தில் இருக்கும் நிலையில் சனம் அரக்கர்கள் டீமில் இருக்கிறார். இன்று வழக்கம்போல டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போது சனம் ஷெட்டி கருப்பு துணியால் கதவை மறைத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த சுரேஷ் சக்ரவர்த்தி தன் கையில் இருந்த கொம்பால் சனம் தலையில் தட்டினார். அதனால் கோபமான சனம் ஷெட்டி வாடா போடா என கத்த துவங்கினார்.

'என் நெற்றியில் அடிக்கிற.. ஒரு இன்ச் கீழ வந்திருந்தா கண் போயிருக்கும். அந்த ஆளு கொடுப்பானா. என்ன நினைச்சிட்டு இருக்கான் அந்த ஆளு' என கத்தினார்.

பாலாஜி முருகதாஸ் அங்கு வந்து 'மூளை கெட்டு போச்சா என்ன?' என சுரேஷ் சக்ரவர்த்தியை பார்த்து கேட்டார். அதற்க்கு அவர் 'மூளையே இல்லை' என பதில் அளித்தார். அதற்கு சனம் 'மூளை இல்லனா இங்க என்ன பண்றீங்க" என கேட்டார்.

அதன் பின் சுரேஷ் உள்ளே சென்று படுத்துவிட்ட நிலையில், "நீ வெளியில வாடா இப்போ" என கத்தினார். மேலும் 'எனக்கும் மனசு இருக்கு' என கூறியிருக்கிறார் சனம் ஷெட்டி.

இந்த சம்பவங்கள் அனைத்தும் இன்றைய ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. சனம் இப்படி கத்தி இருப்பதை பார்த்து பிக் பாஸ் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அடுத்த செய்தி