ஆப்நகரம்

தகாத வார்த்தையில் சேரனை திட்டும் சரவணன்- மிச்சர் சாப்பிடும் லோஸ்லியா..!

பிக்பாஸின் இன்றைய நிகழ்ச்சியில் சேரனை தகாத வார்த்தைச் சொல்லி பேசும் சரவணனின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் லோஸ்லியா மவுனமாக இருந்ததற்கு சமூகவலைதளவாசிகள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 2 Aug 2019, 5:22 pm
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் சொதப்பியவர்களை தேர்வு செய்யும் நடைமுறை அரங்கேறுகிறது.
Samayam Tamil சேரனை தரக்குறைவாக பேசும் சரவணன்- வெடிக்கும் புதிய ப்ரொமோ
சேரனை தரக்குறைவாக பேசும் சரவணன்- வெடிக்கும் புதிய ப்ரொமோ


இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் சேரன், மேடை மீது மட்டுமே சக போட்டியாளர் சரவணன், விஜயகாந்த் போல நடந்துகொண்டார். ஆனால் மற்ற இடங்களில் அந்த கதாபாத்திரத்தை விட்டு தள்ளி இருந்தார் என்று கூறுகிறார்.

இதை கடுமையாக எதிர்க்கும் சரவணன், சேரனை தகாத வார்த்தைகள் சொல்லி திட்டுகிறார். அதற்கு சேரன் கோபத்தை காட்ட, மேலும் தரம் தாழ்ந்த வகையில் பேசுகிறார். அதற்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸுகளில் தர்ஷன், மது மட்டுமே ஆட்சபேம் கூறுகின்றனர்.


சேரன் அருகிலிருக்கும் லோஸ்லியாநடக்கும் சம்பவங்களை அமைதியாக பார்வையிடுகிறார். எதுவுமே பேசவில்லை. ஆனால் நேற்று சாக்‌ஷி - கவின் பிரிவுக்கு தானே காரணம். அபிராமி தவிர வேறு யாரும் தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு கோபமாக கழிவறைக்குச் சென்று லோஸ்லியா அழுதார்.

லோஸ்லியா, சாக்‌ஷி முன்பு கவினை கிழித்து தொடங்கவிட்ட ஹவுஸ்மேட்ஸ்..!

நான் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததற்கு விஜய்சேதுபதி தான் காரணம்- ரகசியத்தை உடைத்த சேரன்

நிரந்தரமாக பிரிந்த Kavin, Sakshi மற்றும் Losliya...!

அங்கு வந்த சேரன், பெற்ற மகளை சமாதானம் செய்வது போல லோஸ்லியாவை அமைதிப்படுத்தினார். அப்போது பேசிய லோஸ்லியா, கவின் - சாக்‌ஷி விவகாரத்தில் தன் பக்கம் சேரன் நிற்கவில்லை என்று கூறி மேலும் அழுதார். மகளாக பார்க்கும் உன்னை எப்போதும் நான் கைவிட்டது இல்லை என்று கூறி லோஸ்லியாவை மேலும் சமாதானம் செய்தார் சேரன்.


பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு ஒரு பிரச்னை ஏற்படும் சமயங்களில் லோஸ்லியா அமைதியாக இருப்பது அந்நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. லோஸ்லியா சுயநலம் எண்ணம் கொண்டவர். மீரா, சேரன் மீது பொய் குற்றச்சாட்டு வைத்த போதும் அவர் அமைதியாகவே இருந்தார். அவர் ஒரு சரியான காரியவாதி. ஏதோ ஒரு ஆதாயத்திற்காகதான் லோஸ்லியா சேரனுடன் நெருக்கமாக உள்ளார் என கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பான பதிவுகளில், லோஸ்லியாவை சொந்த மகளாகவே எண்ணுகிறார் சேரன். ஆனால் லோஸ்லியாவுக்கு தன்னுடைய நலன் மட்டுமே முக்கியம். சேரனை தரக்குறைவாக பேசும் சரவணனை தர்ஷன், மது மட்டுமே எதிர்த்துப் பேசுகின்றனர். பேசவேண்டிய நபரான லோஸ்லியா பிக்பாஸ் வீட்டில் மிச்சர் சாப்பிடுகிறார் என நெட்டிசன்கள் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி