பிக் பாஸ் 4 ஷோவில் தினம்தோறும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய எபிசோடில் கமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருடனும் உரையாடினார். அதன் பின் எலிமினேஷன் பற்றியும் அறிவித்தார்.
மேலும் இந்த சீசனில் முதல் முறையாக வெளியில் இருக்கும் ரசிகர் ஒருவர் போன் மூலமாக போட்டியாளர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 'காலர் ஆஃப் தி வீக்' என்கிற பெயரில் விழுப்புரத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் போனில் பேசினார். அவர் ஷிவானி நாராயணன் உடன் பேச விரும்புவதாக கூறி ஒரு கேள்வியை கேட்டார்.
"ரமேஷுக்கு நீங்கள் கால் செய்யும் போது நீங்களே போனை வைத்துவிட்டீர்கள். அடுத்த வாரம் நாமினேட் ஆவீர்கள் என தெரிந்தே செய்தீர்கள். அது எந்த நம்பிக்கையில் செய்தீர்கள். திரும்பவும் ஷோவுக்குள் வந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையா?" என கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் கூறிய ஷிவானி "அது நம்பிக்கை என சொல்ல முடியாது. நான் ஏற்கனவே கூறி இருந்தது போல நாமினேஷனுக்கு வந்து அதிக நாட்கள் ஆகிவிட்டது. இந்த சீசனில் ஆடியன்ஸ் கிடையாது. போன சீசன்களில் ஆடியன்ஸ் உற்சாகம் இருக்கும். இந்த சீசனில் எங்களுக்கு உற்சாகம் என்றால் நாமினேஷனுக்கு போய்விட்டு எவிக்ட் ஆகாமல் வீட்டுக்குள் இருப்பது தான். எனக்கு கேள்விகளும் முடிந்துவிட்டது. அதனால் தான் காலை வைத்தேன். ஓவர் Confidence என எதுவும் இல்லை" என ஷிவானி கூறினார்.
அதன் பின் இடைவேளையில் பாலாஜி அர்ச்சனாவிடம் இது பற்றி வருத்தத்துடன் பேசினார். ஷிவானியிடம் அவர் இப்படி ஒரு கேள்வியை கேட்டதால் அவர் வெளியில் அனுப்பப்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ என எண்ணி அவர் வருத்தத்துடனேயே இருந்தார்.
மேலும் ரம்யா பாண்டியன் பேசும்போது 'நான் ஸ்வீட் ஆன ஒரு காலர் வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டாரே' என தெரிவித்தார். அதற்கு அனிதா 'பிக் பாஸ் ஷோவுக்கு எதற்கு ஸ்வீட் ஆன ஒரு காலர் வரணும்' என practical ஆக பேசினார்.
மேலும் இந்த சீசனில் முதல் முறையாக வெளியில் இருக்கும் ரசிகர் ஒருவர் போன் மூலமாக போட்டியாளர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 'காலர் ஆஃப் தி வீக்' என்கிற பெயரில் விழுப்புரத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் போனில் பேசினார். அவர் ஷிவானி நாராயணன் உடன் பேச விரும்புவதாக கூறி ஒரு கேள்வியை கேட்டார்.
"ரமேஷுக்கு நீங்கள் கால் செய்யும் போது நீங்களே போனை வைத்துவிட்டீர்கள். அடுத்த வாரம் நாமினேட் ஆவீர்கள் என தெரிந்தே செய்தீர்கள். அது எந்த நம்பிக்கையில் செய்தீர்கள். திரும்பவும் ஷோவுக்குள் வந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையா?" என கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் கூறிய ஷிவானி "அது நம்பிக்கை என சொல்ல முடியாது. நான் ஏற்கனவே கூறி இருந்தது போல நாமினேஷனுக்கு வந்து அதிக நாட்கள் ஆகிவிட்டது. இந்த சீசனில் ஆடியன்ஸ் கிடையாது. போன சீசன்களில் ஆடியன்ஸ் உற்சாகம் இருக்கும். இந்த சீசனில் எங்களுக்கு உற்சாகம் என்றால் நாமினேஷனுக்கு போய்விட்டு எவிக்ட் ஆகாமல் வீட்டுக்குள் இருப்பது தான். எனக்கு கேள்விகளும் முடிந்துவிட்டது. அதனால் தான் காலை வைத்தேன். ஓவர் Confidence என எதுவும் இல்லை" என ஷிவானி கூறினார்.
அதன் பின் இடைவேளையில் பாலாஜி அர்ச்சனாவிடம் இது பற்றி வருத்தத்துடன் பேசினார். ஷிவானியிடம் அவர் இப்படி ஒரு கேள்வியை கேட்டதால் அவர் வெளியில் அனுப்பப்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ என எண்ணி அவர் வருத்தத்துடனேயே இருந்தார்.
மேலும் ரம்யா பாண்டியன் பேசும்போது 'நான் ஸ்வீட் ஆன ஒரு காலர் வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டாரே' என தெரிவித்தார். அதற்கு அனிதா 'பிக் பாஸ் ஷோவுக்கு எதற்கு ஸ்வீட் ஆன ஒரு காலர் வரணும்' என practical ஆக பேசினார்.