ஆப்நகரம்

முதல் ஆளாக சோம் சேகர் எலிமினேஷன்! இனிமே இதை பேசாத.. கமல் அட்வைஸ்

பிக் பாஸ் 4 வீட்டில் பைனலிஸ்ட் ஆக இருந்த சோம் சேகர் கிராண்ட் ஃபினாலேவில் முதல் ஆளாக வெளியேறி இருக்கிறார். இதனால் அவருக்கு ஐந்தாவது இடம் கிடைத்து இருக்கிறது.

Samayam Tamil 17 Jan 2021, 8:27 pm

ஹைலைட்ஸ்:

  • சோம் சேகரை வீட்டுக்குள் இருந்து அழைத்து வந்தார் முகேன் ராவ்.
  • முதல் ஆளாக வெளியேறியதால் அவருக்கு 5வது இடம் தான் கிடைத்திருக்கிறது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Som Sekhar elimination (Pic Credits: Hotstar)
பிக் பாஸ் 4 வீட்டுக்கு இன்று கடந்த சீஸனின் வெற்றியாளர் முகேன் ராவ் வந்திருக்கிறார். இந்த சீசனுக்கு வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பையினை அவர் தான் அரங்கிற்கு கொண்டு வந்தார். பிக் பாஸ் வெற்றிக்கு பிறகு அவர் தற்போது வெற்றி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாக கூறினார்.
அதன் பின் கமல்ஹாசன் முகேனுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார். அவர் அந்த கோப்பையை பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு சென்று அனைவரிடமும் காட்டிவிட்டு, அங்கிருந்து ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்து வெளியில் அழைத்து வர வேண்டும் என கூறினார்.

அதன் படி உள்ளே சென்ற முகேன் ராவ் அங்கிருக்கும் 5 போட்டியாளர்களையும் சந்தித்து பேசினார். முதல் ஆளாக எலிமினேட் ஆனது யார் என்பதை அவர் அவ்வளவு எளிதில் அறிவித்துவிடவில்லை. முதலில் அனைவருக்கும் access card கொடுத்து அதை மெஷினில் வைக்கும்படி கூறினார். யாருடைய கார்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அவர் தான் எலிமினேஷன் என கூறினார்.

போட்டியாளர்கள் அனைவரும் மிக சீரியசாக இதை வைத்து பார்த்த போது தான் இது ப்ராங்க் என தெரியவந்தது. அதன் பின் இரண்டாவது முறையும் போட்டியாளர்களுக்கு மாஸ்க் அணிவித்து பரபரப்பை கூட்டினார். ஆனால் அதுவும் ப்ராங்க் தான் என அறிந்து அனைவரும் ஷாக் ஆனார்கள்.

அதன் பின் மூன்றாவது முறையாக அனைவர் கையிலும் ஒரு பார்கோடை சோம் கொடுத்தார். அப்போது ஒவ்வொருவராக ஸ்கேன் செய்தபோது சோம் சேகர் எலிமினேஷன் என வந்தது. மற்ற போட்டியாளர்களிடம் விடை பெற்று அவர் வெளியில் கிளம்பினார்.

வெளியில் வந்து கமல்ஹாசனிடம் பேசும்போது சோம் சேகர் தான் பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களே வரை இருப்பேன் என நினைத்ததாகவும் ஆனால் தற்போது பைனல் வரை வந்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக கூறினார்.

மேலும் சோம் 10 வருடத்திற்கு முன் விஜய் டிவியின் அழகிய தமிழ் மகன் என்ற ஷோவில் பங்கேற்றது தொடங்கி அதன் பின் பட்ட கஷ்டம் பற்றி பேசினார். தான் திக்கு வாய் என்று சோம் சேகர் கூற தொடங்கியதும் கமல் குறுக்கிட்டார். 'அந்த பிரச்சனை இப்போ இருக்கா?' என கமல் கேட்க, அவர் இல்லை என சொன்னார். இல்லாத பிரச்சனை பற்றி இனி பேசாதீர்கள் என கமல் அவருக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார்.

அடுத்த செய்தி