ஆப்நகரம்

விளையாட்டு வினையானது.. சுரேஷ் சக்ரவர்த்தி - சனம் சண்டையில் நடந்தது இது தான்! முழு விவரம்

சுரேஷ் சக்ரவர்த்தி விளையாட்டாக செய்த ஒரு விஷயம் வினையாக மாறி பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது.

Samayam Tamil 22 Oct 2020, 7:18 am
பிக் பாஸ் வீட்டில் நேற்று நடந்த டாஸ்கின் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்வில் சுரேஷ் விளையாட்டாக செய்த ஒரு விஷயம் இன்று சனம் மற்றும் சுரேஷ் இடையே மிகப்பெரிய மோதலை உண்டாக்கியுள்ளது
Samayam Tamil suresh chakravarthy vs sanam how bigg boss 4 task turned into an ugly fight
விளையாட்டு வினையானது.. சுரேஷ் சக்ரவர்த்தி - சனம் சண்டையில் நடந்தது இது தான்! முழு விவரம்


பிக்பாஸில் நேற்றைய தினம் ஒரு வித்தியாசமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களில் சிலர் சொர்க்கபுரி நாட்டை சேர்ந்த ராஜ வம்சத்தினர் போலவும் மற்றவர்கள் மாயபுரி நாட்டை சேர்ந்த அரக்க வம்சத்தினராகவும் இருந்தனர். இதில் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களை அரக்க வம்சத்தினரை அடிமைப்படுத்தி அவர்கள் மீது கரியை பூச வேண்டும். நேற்றைய தினம் நடந்த இந்த டாக்கின் போதே சுரேஷ் மற்றும் பாலாஜிக்கு முட்டிக் கொண்டது. ஆனால் அது அப்போது பெரிய விவகாரமாக மாறாமல் முடிந்தது. ஆனால் இன்றைய தினம் ஏற்பட்ட மோதல் ஒரு மிகப் பெரிய சலசலப்பை போட்டியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற டாஸ்க்

நேற்று ராஜ வம்சத்தினராக இருந்த போட்டியாளர்கள் இன்று அரக்க வம்சத்தினர் போலவும், அரக்க வம்சத்தினர் ராஜ வம்சத்தினர் போலவும் மாறி இருந்தனர். இந்நிலையில் இதில் சுரேஷ் சக்கரவர்த்தி ராஜ வம்சத்தினராகவும் சனம் ஷெட்டி அரக்க வம்சத்தினராகவும் இருந்தனர். டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அரக்கரான சனம் ஷெட்டியை, சுரேஷ் தன் கையில் வைத்திருந்த கொம்பால் அடிக்க அங்கிருந்து இந்த மோதல் வெடித்தது. சிலை போல் இருந்த ஆஜித்தை அரக்க கூட்டத்தினர் தொந்தரவு செய்திருந்த சமயத்தில் கதவோரம் இருந்த ராஜ வம்சத்தினருக்கு தெரியாத வகையில் தன்னுடைய கருப்பு துணியை வைத்து சனம் மற்றும் ரம்யா மறைத்து வந்தனர்.

கூச்சலிட்ட சனம்

இந்நிலையில் அப்போது கதவு ஒரத்தில் இருந்த சுரேஷ் மறைத்த துணியை அகற்றக் கோரி தன் கையில் வைத்திருந்த கொம்பால் சனமின் தலையில் லேசாக அடித்தார். இதை சற்றும் எதிர்பாராத சனம் நீ எப்படி என்னை அடிக்கலாம் உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது என்று சுரேஷிற்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினார். மேலும் இன்னும் சற்று கீழே அடித்திருந்தால் என் கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கும் என்று சுரேஷ் குறித்து மற்ற போட்டியாளர்களிடம் புகார் அளித்தார்.

விளையாட்டு வினையானது

மேலும் உள்ளே சென்ற சுரேஷினை வெளியே வாடா என்று கோபமாக கத்தி முழக்கமிட்டார். அவரை சமாதானப்படுத்த ரியோ முயல அப்போது எல்லாத்துக்கும் பொறுமையாக இருக்க முடியாது என்று கோபமாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பாலாஜி வீட்டிற்குள் இருந்த சுரேஷிடம் உங்களுக்கு மூளை கெட்டுவிட்டதா என்று ஆவேசமாக கேட்டார். அதற்கு சுரேஷ் திரை மூடி இருந்ததால் நான் யாரை அடித்தேன் என்று தெரியவில்லை என்றும் நானும் நிஷாவும் விளையாடி கொண்டிருந்ததாகவும் சாதாரணமாக கூறினார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் சுரேஷை சனமிடம் சென்று மன்னிப்பு கோருமாறு அறிவுறுத்த அதனை ஏற்ற சுரேஷ் சனமிடம் நீங்கள் அங்கு இருப்பதை நான் கவனிக்கவில்லை என்றும் நிஷாவென்று நினைத்து நான் விளையாட்டாக அடித்ததாக கூறி மன்னிப்புக் கேட்டார்.

சனம் ஷெட்டியை தொடர்ந்து நிஷாவிடமும், ரம்யாவிடமும் மன்னிப்பு கேட்ட சுரேஷ் இறுதியாக பிக்பாஸிடம் தான் செய்த தவறுக்கு கண்ணிர் விட்டு வருந்தியது பார்க்கும் பார்வையாளர்களை கலங்க வைத்தது.

அடுத்த செய்தி