ஆப்நகரம்

நாமினேஷனுக்கு தேர்வான 5 போட்டியாளர்கள்: ஆளாளுக்கு கண்ணீர் விட்டு கதறி அழுத சோகம்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் முறையாக நடந்த ஓபன் நாமினேஷன் மூலம் இந்த வாரம் எலிமினேஷனுக்கு கவின், ரேஷ்மா, மதுமிதா, அபிராமி மற்றும் சாக்ஷி ஆகிய 5 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 30 Jul 2019, 7:57 am
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 3 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று இந்நிகழ்ச்சி துவக்கத்தின் போது கமல் ஹாசன் கூறினார். ஆனால், இதுவரை 17ஆவது போட்டியாளர் குறித்து அறிவிப்பு வரவில்லை. இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேறிய பிறகு அந்த 17ஆவது போட்டியாளர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil bigg boss


கடந்த ஜூன் 23ம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எந்த நாமினேஷனும் இல்லை. மாறாக 2ஆவது வாரத்தில் முதல் முறையாக நாமினேஷன் பிராசஸ் நடந்தது. இதில், முதல் வாரத்தில் யார் கேப்டனாக இருந்தார்களோ அவர்களை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது என்பது ரூல்ஸ். அதனால், முதல் வாரத்தில் கேப்டனாக இருந்த வனிதா 2ஆவது வாரத்தில் நாமினேட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இதுக்காகவே பிக் பாஸ் சாண்டிக்கு ஜெயில் காத்திருக்கிறது: இயக்குனரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

2ஆவது வாரம்: மதுமிதா, கவின், மீரா மிதுன், ஃபாத்திமா பாபு, சரவணன், சேரன் மற்றும் சாக்‌ஷி ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். ஆனால், இவர்களில் இருந்து ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

3ஆவது வாரம்: மதுமிதா, சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா மற்றும் வனிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டர். இதிலிருந்து வனிதா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஆவது வாரம்: அபிராமி, சேரன், சரவணன், மீரா மிதுன் மற்றும் மோகன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில், மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார்.

5ஆவது வாரம்: அபிராமி, சேரன், சரவணன், மீரா மிதுன், கவின் மற்றும் சாக்‌ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில், மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார்.

6ஆவது வாரம்: கவின், மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி, அபிராமி ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: Bigg Boss Nomination: போச்சா இந்த வாரம் ஓபன் நாமினேஷன்: அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

இந்த நிலையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடந்தது. இதில், போட்டியாளர்கள் அவர்கள் முன்பே ஏன், எதற்காக நாமினேட் செய்றோம் என்பதை விளக்கத்துடன் கூறி அவர்களை நாமினேட் செய்ய வேண்டும். இதில், கவின் 6 வாக்குகள், மதுமிதா 6 வாக்குகள், ரேஷ்மா 4 வாக்குகள், சாக்‌ஷி 3 வாக்குகள் மற்றும் அபிராமி 2 வாக்குகள் வாக்கி 6ஆவது வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: Bigg Boss Episode 36: மதுமிதாவிற்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து: சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்!

பிக் பாஸ் வீட்டில் ஓபனாக நடந்த நாமினேஷனில் போட்டியாளர்களுக்கு இடையில், மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக அமர்ந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து கவின் அல்லது மதுமிதா அல்லது ரேஷ்மா ஆகியோரில் யாரேனும் ஒருவர் தான் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கவினால் தொடர்ந்து சாக்‌ஷி மற்றும் லோஸ்லியா ஆகியோருக்கு இடையில் பிரச்சனை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மதுமிதா அடிக்கடி சாதாரண ஒரு பிரச்சனையை ஊதி பெரிதாக்கிவிடுகிறார். இவர்கள் வரிசையில், நடுநிலையாக இருக்கும் ரேஷ்மா இதுவரை மக்களின் ஆதரவை பெறவில்லை. அதனால், அவர் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை வெளியேறிய வனிதா மற்றும் மீரா மிதுன் ஆகியோர் சர்ச்சைக்குப் பின்னர் வெளியேற்றப்பட்ட நிலையில், பெண்களைப் பற்றி இழிவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய சரவணன் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி