ஆப்நகரம்

நான் ஏன், எதை எதிர்பார்த்து பிக் பாஸ் வீட்டிற்கு சென்றேன்?: உண்மையை சொன்ன கவின்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணத்தை கவின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Oct 2019, 11:36 am
பிக் பாஸ் கொடுத்த ரூ. 5 லட்சம் பணம் போதும் என்று நினைத்து கடந்த வாரம் வெளியேறினார் கவின். அவர் தனது குடும்ப பிரச்சனைகளை மனதில் வைத்து இந்த பணம் போதும் என்று கிளம்பிச் சென்றார். கவின் வெளியேறியதில் அவரின் ஆதரவாளர்களுக்கு தான் மிகவும் வருத்தம்.
Samayam Tamil kavin


இந்நிலையில் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது,

எனக்கு இதை எப்படி ஆரம்பிக்கிறது என்றே தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு அல்லது தற்போது எனக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்த பிறகு சொல்லலாம் என்று இருந்தேன்.

View this post on Instagram A post shared by Kavin M (@kavin.0431) on Sep 30, 2019 at 7:46am PDT


முதலில் நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நான் முயற்சி செய்த அனைத்திலும் தோல்வி அடைந்தேன் என்று நினைத்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தொலைத்தவற்றை இந்த வாய்ப்பு மூலம் மீண்டும் பெற்றுவிடலாம் என்று நினைத்தேன். நான் பாசிட்டிவ் ஆட்டிடியூடுடன் உள்ளே சென்றேன். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த விரும்பினேன். இதை தவிர நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

வெளியே வந்து உண்மையை தெரிந்து கொண்ட தர்ஷன் என்ன சொன்னார் தெரியுமா?

இந்த நிகழ்ச்சி மூலம் கொஞ்சம் பணம் மற்றும் புகழை மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது பார்ப்பதை என்னால் புரிந்து கொள்ளவோ, முழுமனதுடன் ஏற்கவோ முடியவில்லை. இந்த புகழை நான் ரசிக்க நினைத்தாலும் எதிர்பார்க்காமல் ஏற்பட்ட பிரச்சனைகளால் அது முடியவில்லை. அதனால் நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு என்னால் சரியாக நன்றி சொல்ல முடியவில்லை. தற்போது நீங்கள் காட்டிய அன்புக்கு பதில் அன்பு காட்டுவதை விட என் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

இன்னைக்கு தான் பிக் பாஸ், உருப்படியா ப்ரொமோ வீடியோ வெளியிட்டிருக்கீங்க

அடுத்த செய்தி