ஆப்நகரம்

Bigg Boss Vikraman: வெளியேறுவதற்கு முன்பாக அமுதவாணன் சொன்ன விஷயம்: கதறி அழுத விக்ரமன்.!

பிக்பாஸ் வீட்டுக்குள் அமுதவாணன் வெளியேறிய போது விக்ரமன் கண் கலங்கி அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 21 Jan 2023, 8:57 am
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விக்ரமன். மற்ற போட்டியாளர்கள் விக்ரமனை டார்கெட் செய்த போதும், வீட்டில் பல பிரச்சனைகள் நடந்து சமயத்திலும் விக்ரமன் கலங்காமல் இருந்தார். இந்நிலையில் முதன்முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் விக்ரமன் கதறி அழுதுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Bigg Boss 6
Bigg Boss 6


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த சீசன் வெற்றியாளர் யார் என்பது தெரிய வந்துவிடும். விக்ரமன் அல்லது அசீம் இருவரில் ஒருவர் இந்த சீசனில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு ஆதரவாக இணையத்தில் ஓட்டு சேகரிக்கும் வேலைகளும் நடந்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பிக்பாஸ் வீட்டுக்குள் பைனலிஸ்ட்டாக விக்ரமன், கதிரவன், மைனா நந்தினி, ஷிவின் மற்றும் அமுதவாணன் ஆகியோர் இருந்தனர். இதனையடுத்து பண மூட்டை டாஸ்க் நடந்த போது, 3 லட்சம் பணத்துடன் விஜே கதிரவன் வெளியேறினார். அதன்பின்னர் பிக்பாஸ் வரலாற்றில் முதமுறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டது. போட்டியாளர்களில் விருப்பப்பட்டவர்கள் அதனை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்தார்.

நேரம் ஆக ஆக பணப்பெட்டியில் இருந்த தொகை அதிகரித்து கொண்டே சென்றது. ஒருக்கட்டத்தில் பணத்தின் மதிப்பு 13 லட்சம் ரூபாய் வரை சென்ற நிலையில் அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இதனால் சக போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து விக்ரமனும், அமுதவாணனும் அமர்ந்து பேசினர்.

Vijay Tv: அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணுவேன்: ஈஸ்வரியிடம் கொந்தளித்த எழில்.!

அப்போது கலங்கிய கண்களுடன் பேசிய அமுதவாணன்,"எனக்கு ரொம்ப எல்லாம் தெரியாது. நான் அப்டேட் எல்லாம் கிடையாது. காமெடியா, டான்ஸா பண்ணுவேன். அவ்வளவுதான். ஆனா நீங்க அறிவார்ந்த ஒரு ஆளா இருக்கீங்க. எனக்கு கிடைக்கிறத விட உங்களுக்கு கிடைக்கணும். எனக்கு கிடைச்சா என்ன சுத்தி இருக்க கொஞ்சம் பேருக்கு ஹெல்ப் பண்ணுவேன். அதை எப்படியாவது பண்ணிட்டு தான் இருப்பேன். அதுக்கான வழி எப்படியும் வந்துடும். ஆனா நீங்க ஜெயிக்கும்போது பெரிய மாற்றமே வரும்".

Bharathi Kannamma: பாரதியின் பரிதாப நிலை: மனசாட்சி இல்லாமல் பேசிய கண்ணம்மா.!

"இதுமூலமா உங்க கருத்து போய் சேர்ந்ததுனா பெரிய மாற்றம் வரும். அதுதான் நல்லது. அதுதான் கரெக்ட். அதுனால ஒரு நல்ல விஷயம் நடந்துச்சுன்னா சந்தோஷம். மத்தபடி நம்ம கலாய்ச்சு பேசிருக்கோம், கோபப்பட்டிருக்கோம். இதெல்லாம் ரொம்ப சிம்பிளான விஷயம் தான்" என உருக்கமாக பேசினார். இதனை கேட்டு விக்ரமன் கண் கலங்கி அழுதுவிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி