ஆப்நகரம்

வாவ்... மீண்டும் இணைந்த வி ஆர் தி பாய்ஸ் கேங்! உற்சாகத்தில் ரசிகர்கள்

வீ ஆர் தி பாய்ஸு கேங் மீண்டும் விஜய் டிவியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்துள்ளனர்.

Samayam Tamil 12 Oct 2019, 3:26 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த சீசன் கடந்த இரண்டு சீசன்களை விட மிகவும் ஜாலியாகவும், அதே சமயம் சுவாரஸ்யமாகவும் சென்றது.
Samayam Tamil bb


அதற்கு மிக முக்கிய காரணம் பாய்ஸ் கேங் தான். சாண்டி, முகென், தர்ஷன் மற்றும் கவின் ஆகியோர் சேர்ந்து தான் பாய்ஸ் கேங்கை உருவாக்கினார்கள். அதில் லாஸ்லியாவும் இருந்தார். அப்போது அவர்கள் அனைவரும் இணைந்து 'வீ ஆர் தி பாய்ஸு' பாடலை உருவாக்கினர். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட லொஸ்லியா

அதே போன்று சண்டையானாலும் ஒருவருக்கு ஆதரவாக மற்றவர்கள் நின்றது, மகிழ்ச்சியானாலும் அதனைச் சமமாகப் பகிர்ந்து கொண்டது என மக்களின் மனதில் பாய்ஸ் கேங் இடம் பிடித்தனர்.

இந்த நிலையில் மக்கள் மனங்களைக் கவர்ந்த இந்த பாய்ஸ் கேங்கை வைத்து விஜய் டிவி மீண்டும் நமக்காக கொண்டு வந்துள்ளனர். ‘வீ ஆர் தி பாய்ஸு' என்னும் சிறப்பு நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த்தும், ரியோவும் தொகுத்து வழங்குகின்றனர்.


அதில் கவின், சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. நாளை 3.30 மணிக்கு நாளை மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

அதில் அனைவரும் வீ ஆர் தி பாய்ஸு டி சர்ட்டும், குருநாதா டி சர்ட்டும் அணிந்துள்ளனர். இந்த புரோமோ மூலம் நிச்சயம் நிகழ்ச்சி செம ஜாலியாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி