ஆப்நகரம்

கையில் காயத்துடன் வெளியே வந்த மதுமிதா: ஒரு நாளுக்கு முன்பே வெளியேற்றமா? என்ன நடந்தது?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட நடிகை மதுமிதா திடீரென்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Samayam Tamil 17 Aug 2019, 7:09 pm
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வழக்கத்திற்கு மாறாக கோலாகலமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 17ஆவது போட்டியாளராக நடிகை கஸ்தூரி எண்ட்ரி கொடுத்தார். முதல் வாரத்தைத் தவிர அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். இந்த நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் மதுமிதா, அபிராமி, கவின், லோஸ்லியா மற்றும் முகென் ஆகிய 5 பேரும் நாமினேசன் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
Samayam Tamil Madhumitha Bigg Boss


Also Read: Madhumitha பிராடு செய்துதான் கேப்டன் ஆனாரா? - வைரலாகும் மீம்ஸ்...!

வழக்கத்திற்கு மாறாக இன்று தாமதமாக வெளியான முதல் புரோமோ வீடியோவில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே வந்து கமல் ஹாசனை சந்திப்பது போன்று வீடியோ அமைந்துள்ளது. ஆனால், அப்படி வரும் போது மதுமிதாவின் இடது கையில், கட்டு போடப்பட்டிருந்தது. இது தான் இன்றைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து 3ஆவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் வீட்டிற்கு வந்து வெளியில் என்னவெல்லாம் நடந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.


இதனால், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், மறுபடியும் தனது தரப்பு நியாயத்தை வெளிபடுத்த போராடியுள்ளார். இதனால், அவரது கோரதாண்டவம் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்துள்ளது. ஏற்கனவே கமல் ஹாசன் கேட்டு கேட்டு நொந்து போன பல விஷயங்களை மதுமிதா மீண்டும் சுட்டிக்காட்டி சண்டையிட்டுள்ளார். இதனால், மறுபடியும் இந்த வாரத்திற்கான எலிமினேசன் பட்டியலில் அவருக்கும் இடம் கிடைத்துள்ளது.

Also Read: பிக்பாஸ் வீட்டிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் வனிதா..?


இந்த நிலையில், இன்று வெளியான புரோமோ வீடியோவில் தட்டி வைத்து கொடுத்த இந்த வெற்றியை தட்டிவிட்டு விட்டு இங்கு வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது என்று கம்ல ஹாசன் கூறுகிறார். மேலும், உங்களுடைய இந்த தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை மது எடுத்த இந்த முடிவு ஒரு தவறான முடிவு. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். மது செய்தது தப்பு என்று சேரன் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Also Read: Episode 54 Highlights: பழைய கதையை பேசி பேசி முட்டிக்கொள்ளும் போட்டியாளர்கள்- இதுக்கு ஒரு என்டே கிடையாதா..?

இதற்கிடையில், பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வரும் மதுமிதா அவரது இடது கையில் கட்டுப் போட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது? எதற்காக கையில் கட்டு போடப்பட்டுள்ளது? ஒரு வேலை தற்கொலைக்கு முயற்சித்தாரா? என்ற கேள்வி எல்லாம் எழுந்துள்ளது. இந்த கேள்வியோடு கேள்வியாக மதுமிதா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில் புரோமோவை பார்க்கும் போது அவர் வெளியேறியதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றே மதுமிதா வெளியேற்றப்பட்டால் நாளை யார் தான் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி