ஆப்நகரம்

சித்தப்பு, மதுமிதா ஏன் வரவில்லை?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், இதுவரை சிறப்பு விருந்தினர்களாக சித்தப்பு சரவணன் மற்றும் மதுமிதா இருவரும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

Samayam Tamil 6 Oct 2019, 6:38 pm
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் 3. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களில், சாண்டி, முகென், லோஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கோடான கோடி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil Madhumitha


இந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்தப்பு சரவணன், மதுமிதா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்கு திரும்ப வரவில்லை. மற்ற போட்டியாளர்கள் பலரும் பலமுறை வீட்டிற்கு வந்து சென்ற நிலையில், சரவணன், மதுமிதா மட்டும் வரவில்லை.

Also Read: பிக் பாஸ் தமிழ் 3 இறுதி

இந்நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் விதிமுறைகளை மதுமிதா மீறியதாக அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பிறகு சேர வேண்டிய நிலுவைத் தொகையை திருப்பித் தராவிட்டால் மதுமிதா தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார் என்று விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த மதுமிதா, விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான இன்வாய்ஸ் கேட்டார்கள். என் கணவரும் அந்த தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்று கொடுத்துவிட்டு வந்தார். நிலைமை இப்படியிருக்க, என் மீது தொலைக்காட்சி நிர்வாகம் பொய் புகார் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Bigg Boss 3 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அரசியல் பயணம்!

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் மதுமிதா டார்க்கெட் செய்யப்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 8 பேர் எப்படி ராக்கிங் பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tamil Bigg Boss 3: ஹீரோ சாண்டி, பாடகர் முகென், டான்சர் லோஸ்லியா, நடிகை ஷெரினின் பிக் பாஸ் பயணம்!

இதே போன்று பொது நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை முன் வைத்ததால் இந்நிகழ்ச்சியிலிருந்து சித்தப்பு சரவணன் வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக மதுமிதா மற்றும் சரவணன் இருவருமே பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக வரவில்லை.


ஆனால், இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், இருவரும் கலந்து கொள்வார்களா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இவர்களைத் தவிர அபிராமி, சாக்‌ஷி, ரேஷ்மா, தர்ஷன், மோகன் வைத்யா, கவின், ஃபாத்திமா பாபு, வனிதா ஆகியோர் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி