ஆப்நகரம்

40 வயது நடிகை கொரோனாவுக்கு பலி

நடிகை அபிலாஷா பாடில் கொரோனா காரணமாக உயிரிழந்தார். 40களில் இருக்கும் அவர் இளம் வயதில் மரணமடைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Samayam Tamil 6 May 2021, 5:03 am
நடிகை அபிலாஷா பாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவருக்கு சுமார் 40 வயது ஆகிறது என கூறப்படுகிறது.
Samayam Tamil Abhilasha Patil


ஜீ யுவா சேனலில் ஒளிபரப்பான Baap Manus தொடரில் அபிலாஷா உடன் சேர்ந்து நடித்த சஞ்சய் குல்கர்னி தான் அபிலாஷா பாட்டிலின் மரணம் பற்றிய செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.

"நேற்று மாலை 6 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது, அதில் அபிலாஷா உடல்நிலை மோசமாக இருக்கிறது என தகவல் சொன்னார்கள். அவர் பனாரஸ் சென்று இருக்கும்போது அவருக்கு ஜுரம் வந்திருக்கிறது. அவர் மும்பைக்கு திரும்ப வரும்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது எண்ணுக்கு போன் செய்து பார்த்தேன், இரண்டும் நம்பரும் ஸ்விட்ச் ஆப் என வந்தது."

"அதன் பிறகு இரவு 8.30 மணிக்கு அபிலாஷா இறந்துவிட்டார் என்கிற செய்தி மட்டும் வந்தது. அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் நிறைய திட்டங்கள் வைத்திருந்தார். அவர் கடினமாக உழைக்கக்கூடியவர். அவர் மரணம் துறைக்கு பெரிய இழப்பு" என அவர் கூறி உள்ளார்.

அபிலாஷாவுக்கு கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளார். அவர் சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் நடித்து இருக்கிறார். சுஷாந்த் நடித்து உள்ள Chhichhore படத்தில் அவர் நடித்து உள்ளார்.

அடுத்த செய்தி