பிரபல சீரியல் நடிகை வீடியோ எடிட்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றது
அப்படி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த தொடர்களில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.மக்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அதன் பிறகு வேறு ஒரு கதைக்களத்துடன் நாம் இருவர் நாமக்கு இருவர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. இந்த தொடரிலும் நடிகர் செந்தில் மாயன், மாறன் என்ற இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மூலம் நடிகர் செந்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஆயிரம் எபிசோடுகளை கடந்த இந்த தொடர் ஆரம்பம் முதல் முடிவும் வரை டிஆர்பியில் முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த சீரியலில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை தீபா. இவர் ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட பல சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டரிலேயே நடித்துள்ளார். தற்போது தீபா சன் தொலைக்காட்சியில் பிரியமான தோழி, ஜீ தொலைக்காட்சியில் அன்பே சிவம் தொடரில் தீபா பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தகவல் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. நடிகை தீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மகனுடன் தனியே வசித்து வருகிறார். தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கிறார். நடிகை தீபா சாய் கணேஷ் பாபுவை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தீபா காதலர் சாய் கணேஷ் பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மை லவ் பாபு குறிப்பிட்டுள்ளார். சாய் கணேஷ் பாபு வீடியோ எடிட்டராக இருக்கிறார். இரண்டாவது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
அப்படி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த தொடர்களில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.மக்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அதன் பிறகு வேறு ஒரு கதைக்களத்துடன் நாம் இருவர் நாமக்கு இருவர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. இந்த தொடரிலும் நடிகர் செந்தில் மாயன், மாறன் என்ற இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மூலம் நடிகர் செந்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஆயிரம் எபிசோடுகளை கடந்த இந்த தொடர் ஆரம்பம் முதல் முடிவும் வரை டிஆர்பியில் முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த சீரியலில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை தீபா. இவர் ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட பல சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டரிலேயே நடித்துள்ளார். தற்போது தீபா சன் தொலைக்காட்சியில் பிரியமான தோழி, ஜீ தொலைக்காட்சியில் அன்பே சிவம் தொடரில் தீபா பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தகவல் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. நடிகை தீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மகனுடன் தனியே வசித்து வருகிறார். தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கிறார். நடிகை தீபா சாய் கணேஷ் பாபுவை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தீபா காதலர் சாய் கணேஷ் பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மை லவ் பாபு குறிப்பிட்டுள்ளார். சாய் கணேஷ் பாபு வீடியோ எடிட்டராக இருக்கிறார். இரண்டாவது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.