ஆப்நகரம்

BigBoss: பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரிக்கு அந்த ஒரு காரணத்தால் படவாய்ப்பே இல்லையா ? அடப்பாவமே..!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை தட்டி சென்ற ஆரிக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லையாம்.அவர் இயக்குனர்களிடம் கதை மற்றும் வசனங்களை மாற்றச்சொல்வதால் தான் அவருக்கு படவாய்ப்புகள் இல்லை என ஒரு சிலர் பேசி வருகின்றனர்

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 3 Apr 2023, 7:16 pm
ஒரு பக்கம் பாரதிராஜா மறுபக்கம் பாலச்சந்தர் என இரு ஜாம்பவான்கள் நடித்த ரெட்டைசுழி படத்தில் அறிமுகமானவர் தான் ஆரி. இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளியான அப்படத்தில் அறிமுகமான ஆரிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
Samayam Tamil ஆரி


அதன் பிறகு பல போராட்டங்களை சந்தித்த ஆரிக்கு கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தின் மூலம் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆரிக்கு மாயா திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
AK62: எனக்கும் கிரிக்கெட் தெரியும்..நானும் ஒரு ஆல்ரவுண்டர் தான்..அஜித்தின் மறுபக்கம்..!

இந்நிலையில் ஆரி ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பிட்னஸ் டிரைனராகவும் இருந்துள்ளார். சேரன், ஆதி, ஜீவா போன்ற நடிகர்களின் பிட்னஸ் டிரைனராகவும் இருந்துள்ளார் ஆரி. இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக பங்கேற்றார் ஆரி.


அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதில் தன் தனித்துவத்தை வெளிப்படுத்தி பிக் பாஸ் டைட்டிலை ஆரி தட்டி சென்றார். இதன் மூலம் பல ரசிகர்களையும் பெற்றார் ஆரி. எனவே இதன் பிறகு அவருக்கு பல படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் டைட்டிலை வென்ற பின் ஆரி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படம் மட்டுமே வெளியானது.


இப்படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க ஆரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஆரியின் கைவசம் படங்களே இல்லையாம். அதற்கு ஆரி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நடந்துகொள்ளும் விதம் தான் காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

அதாவது தான் நடிக்கும் படங்களிலும், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் ஆரி நிறைய திருத்தங்களை கூறி வருகிறாராம். மேலும் கதையிலும் பல மாற்றங்களை ஆரி செய்யசொல்வதால் இயக்குனர்கள் தலைதெறித்து ஓடுகின்றார்களாம்.


இதன் காரணமாகவே ஆரிக்கு படவாய்ப்புகள் இல்லை என ஒரு சிலர் பேசி வருகின்றனர். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை மேலும் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் கிடப்பில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி