ஆப்நகரம்

தென்னிந்திய இயக்குனர் படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல ஹிந்தி சீரியல் நடிகை அதிர்ச்சி புகார்

நடிகை டோனல் பிஷ்ட் ஒரு தென்னிந்திய இயக்குனர் வாய்ப்புக்காக படுக்கைக்கு வரும்படி அழைத்தார் என அதிர்ச்சி புகார் கூறி உள்ளார்.

Samayam Tamil 26 Dec 2020, 12:11 pm
சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என அழைக்கும் பழக்கம் சினிமா துறையினருக்கு அதிகம் இருக்கிறது என்கிற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பல நடிகைகள் இது பற்றி வெளிப்படையாக புகார் கூறினாலும் அது நின்ற பாடில்லை.
Samayam Tamil Donal Bisht


தற்போது பிரபல ஹிந்தி சீரியல் நடிகை டோனல் பிஷ்ட் அளித்துள்ள பேட்டியில் தன்னை ஒரு தென்னிந்திய இயக்குனர் படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறி இருக்கிறார். பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி பேட்டியில் தெரிவித்துள்ள அவர், அது தொடர்பாக போலீஸ் புகார் ஒன்றை அளித்துவிட்டு தான் அடுத்த பணியை செய்ய சென்றுவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

அதிகம் ரசிகர்களை கொண்ட டோனல் பிஷ்ட் இப்படி கூறி இருப்பது சின்னத்திரை வட்டாரம் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. டோனல் சின்னத்திரைக்கு வந்து 5 வருடங்களுக்கும் மேல் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சம்பவங்கள் தான் நடிகை ஆக வேண்டும் என்ற கனவிற்கு தடையாக வந்தன என்றும், ஆனால் முயற்சியை கைவிடாமல் இருந்ததால் தான் தற்போது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றும் கூறி இருக்கிறார்.

மேலும் டோனல் டெல்லியில் பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு திடீரென வேறொரு நடிகைக்கான இவரை டநீக்கிவிட்டார்களாம். இதையும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் அவர்.

View this post on Instagram A post shared by Donal Bisht (@donalbisht)

அடுத்த செய்தி