ஆப்நகரம்

ஹீரோயின் கனவு என்னாச்சு; வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் சின்னத்திரை நாயகி!

சின்னத்திரையில் பிரபலமாக வலம் வந்த நடிகை கன்னிகா ரவி, பெரிய திரையில் ஹீரோயின் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

Samayam Tamil 30 May 2019, 9:45 am
திரைத்துறையில் சாதிக்க வேண்டும், பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து வருபவர்கள் ஏராளம். அந்த வகையில் சின்னத்திரையில் பலரும் பெரிய திரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் நடிகை கன்னிகா ரவி.
Samayam Tamil Kannika Ravi


இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனார். பிறகு பாலச்சந்தர் இயக்கிய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் வெள்ளித்திரையில் நுழைய வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்தார்.

அப்போது தான் ‘கெளுத்தி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக படம் பாதியில் நின்று போனது. இதையடுத்து ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அது வெளியாகவில்லை. இருப்பினும் மனம் நொந்து போகவில்லை.

இந்நிலையில் தான் ‘தேவராட்டம்’ படத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தார். இது அவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தது. இதைத் தொடர்ந்து ‘அடுத்த சாட்டை’, சசிகுமார் படம், மற்றொரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வேற்று மொழி நாயகிகள் கூட தமிழில் சாதித்து விடுகின்றனர். ஆனால் தமிழ் பேசும் நம்ம ஊர் பெண்கள் படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு நாள் தான் நினைத்ததை அடைவேன் என்று கன்னிகா ரவி உறுதியுடன் கூறுகிறார்.

அடுத்த செய்தி