ஆப்நகரம்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட ரம்யா பாண்டியன், கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வீடியோ வைரல்

பிக் பாஸ் ரம்யா பாண்டியன் இன்று ஒரு கடை திறப்பு விழாவில் பாலாஜி முருகதாஸ் உடன் பங்கேற்றார். பார்க்க அதிகம் பேர் வந்ததால் அங்கு அவர் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கிறார்.

Samayam Tamil 24 Feb 2021, 4:39 pm
பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு ரம்யா பாண்டியனுக்கு அதிக படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அது மாட்டுமின்றி அவர் ஏராளமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
Samayam Tamil actress ramya pandian troubled by huge crowd in shop opening function
கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட ரம்யா பாண்டியன், கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வீடியோ வைரல்


ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் சினிமாவில் நடித்து பாப்புலர் ஆனதை விட மொட்டைமாடி போட்டோஷூட் மூலமாக தான் அதிகம் பிரபலம் அடைந்தார். அதற்கு பின் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின் தான் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக நுழைந்தார்.

பிக் பாஸில் அவர் strong போட்டியாளர்கள் என ஆரம்பத்தில் இருந்தே ஒரு பேச்சு இருந்தாலும், அவருக்கு போகப்போக நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வர ஆரம்பித்தது. குறிப்பாக ஆரிக்கு எதிராக அவர் பேசிய போதெல்லாம் அவரை சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்தார்கள்.

பட வாய்ப்பு

பிக் பாஸுக்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு அதிக அளவு பட வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் ஒரு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் சிவி குமார் தயாரிப்பில் ஒரு படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

மேலும் ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி இரண்டாம் சீசன் நிகழ்ச்சிக்கு வருகிறார். அதன் ப்ரொமோ வீடியோவும் சமீபத்தில் வெளிவந்து இருந்தது. முதல் சீசனில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் மீண்டும் ரீ என்ட்ரி ஆகி இருப்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி புகழும் உற்சாகம் அடைந்து இருக்கிறார்.

கடை திறப்பு விழா

டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் தற்போத கடை திரைக்கு விழா, கல்லூரி விழா என தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார்கள்.

அப்படி இன்று ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் ஒரு கடை திறப்பு விழாவுக்காக செண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரம்யாவை பார்க்க அதிக அளவு கூட்டம் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது.

அதில் ரம்யா பாண்டியனுக்கு சிக்கிக்கொண்டார். அவரை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்ல முற்பட்டாலும் பயன் இல்லை.

வீடியோ

கூட்டத்தில் சிக்கிய நேரத்தில் ரம்யா சொன்ன விஷயம்

ரம்யா பாண்டியன் கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கும் வேளையிலும் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். அதை கேட்டு தான் அனைவரும் நெகிழ்ச்சி ஆகி இருக்கிறார்கள்.

"பாத்து பாத்து லேடீஸ்".. அங்கிருக்கும் பெண்கள் பத்திரமாக இருங்கள் என்று தான் அவர் குரல் கொடுத்து இருக்கிறார். அதை வீடியோவில் பார்த்து நெட்டிசன்களும் அவரை தற்போது பாராட்டி வருகிறார்கள்.

வீடியோ

வீடியோ

அடுத்த செய்தி