ஆப்நகரம்

15 நாள்ல என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி காட்டுறேன்: சரவணன் அம்மா சவால்

எதிர்பாராமல் சரவணனின் திருமணம் நின்றுவிட, மீண்டும் ஒரு திருமணத்தை நடத்தி வைப்பேன் என சவால் விடுகிறார் சிவகாமி.

Samayam Tamil 29 Oct 2020, 2:27 pm
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி சீசன்-2. தீவிரவாதிகளின் தாக்குதலால் சந்தியா தனது அப்பா, அம்மாவை இழந்து தவிக்கிறார். இருவரின் கதையும் வேறு வேறு பாதையில் சென்றாலும், இவர்கள் எப்படி ஜோடியாக ஒன்றிணைவார்கள் என்பதே பரபரப்பாக இருக்கிறது.
Samayam Tamil 15 நாள்ல என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி காட்டுறேன்: சரவணன் அம்மா சவால்


சரவணனிற்கு திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வர, அவர் கவிதா மீது காதல் வயத்தில், பல கனவுகளுடன் சுற்றி வருகிறார். அவருக்காக தங்கத்தில் செயின் வாங்கி வைத்து சர்பிரைஸ் கொடுக்க காத்திருக்கிறார்.

சரவணனும் மாப்பிள்ளை கோலத்தில் மகிழ்ச்சியாக காரில், பேண்ட் வாத்தியத்தோடு உற்சாகமாக மண்டபத்திற்கு செல்கிறார். ஆனால் இதிலும் ஒரு டுவிஸ்ட்டாக மணப்பெண் திருமணம் பிடிக்காமல் ஓடி விடுகிறார். மாப்பிள்ளை சாதாரண ஸ்வீட் ஷாப்பின் முதலாளி மற்றும் அவருக்கு படிப்பறிவு இல்லாததால் திருமணம் பிடிக்கவில்லை என ஓடி விடுகிறார்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் வருதத்தில் இடிந்து போய் இருக்கிறார்கள். சரவணன் துக்கத்தை வெளியே காட்டாமல் குடும்பத்திற்காக சிரித்து மகிழ்ச்சியாக இருகிறார்.

சரவணன் துக்கத்தில் இருக்க, சந்தியாவோ தனது பெற்றோருடன் இருந்த நாட்களை எண்ணி அழுகிறார். தனது பெற்றோரை கொன்ற தீவிரவாதிகளை தேடி, அவர்களை கொலை செய்வேன் என ஆக்ரோஷத்துடன் வாக்குறுதி அளிக்கிறார்.

இந்த துக்கத்தில் இருந்து வெயே வருவதற்குள், சந்தியாவின் அண்ணன் மணிக்கு வெளிநாட்டிற்கு செல்ல விசா வந்துவிடுகிறது, அதை பார்த்ததும் மகிழ்ச்சி அடைகிறார் மணி. சந்தியாவை தனியாக விட்டுச் செல்வாரா மணி?

சரவணன் தன் துக்கத்தை மறக்க தனது கடையை திறக்கிறார். அங்கு வந்த பெண்கள் சரவணனிற்கு திருமணம் தடைபட்டதைப் பற்றி கேலி செய்துப் பேச, இதனை கேட்டு பொங்கி எழுந்த சிவகாமி எனது மகனுக்கு 15 நாட்களில் திருமணம் செய்து வைப்பேன் என அவர்களிடம் சவால் விடுகிறார்.

சரவணனிற்கும், சந்தியாவிற்கும் திருமணம் நடைபெறுமா? இருவரும் எப்படி ஜோடி சேர்வார்கள்? என விறுவிறுப்பாக அமைந்திருக்கும் ராஜா ராணி சீரியலில் காணலாம்.

நான் எந்த தப்பும் பண்ணல, கோவிலில் தீமிதித்து நிரூபிக்கிறேன்: கண்மணி கதறல்

அடுத்த செய்தி