பிக் பாஸ் போட்டியாளர்கள் பலர் பங்கேற்ற பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியின் பிரம்மாண்ட பைனல் நேற்று நடைபெற்றது. அதில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஜோடி டைட்டில் ஜெயித்தது. அவர்களுக்கு 3 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது. டைட்டில் ஜெயித்தது பற்றி அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். தான் பட்ட கஷ்டங்கள் பற்றியும், தற்போது வெற்றி பெற்ற பிறகு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் பற்றி பேசி இருக்கிறார்.
”உங்க எல்லாரோட ஆதரவுக்கும் அன்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.😍 மூன்று மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி! 😌அதை இத்தனை மக்கள் கொண்டாடுனது ரொம்ப நெகிழ வச்சிடுச்சு. வலையொலி (insta)வில் படிச்சு முடிக்க முடியாத வண்ணம் அவ்வளவு குறுஞ்செய்திகள்.! 😯🤗இவ்வளவு அன்பும் என்னோட பல காயங்கள கடந்த 3 மாசத்துல ஆற்றி இருக்கு😐 குழந்தைய கையில வாங்கினதுமே பிரசவ வலி மறந்து போகுற மாதிரி தூக்கம் இல்லாம,நேரத்துக்கு சாப்பிடாம, வாங்கிய காயங்கள்,பட்ட வலி எல்லாம் கையில கேடயத்தை வாங்கின உடனேயே பறந்து போச்சு! 😌😌😌”
”பிரபா, என் குடும்பம், என் மாஸ்டர்கள், இத படிக்கிற நீங்கனு எல்லாருக்கும் இந்த வெற்றில பெரிய பங்கு இருக்கு! எங்க பங்கு தான் கம்மி🤗🙏🏻மக்களோட எதிர்ப்பார்ப்பும் வாழ்த்தும் தான் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க வச்சுகிட்டே இருந்தது. மிக்க நன்றி எல்லோருக்கும்🙏🏻🥰” என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
”உங்க எல்லாரோட ஆதரவுக்கும் அன்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.😍 மூன்று மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி! 😌அதை இத்தனை மக்கள் கொண்டாடுனது ரொம்ப நெகிழ வச்சிடுச்சு. வலையொலி (insta)வில் படிச்சு முடிக்க முடியாத வண்ணம் அவ்வளவு குறுஞ்செய்திகள்.! 😯🤗இவ்வளவு அன்பும் என்னோட பல காயங்கள கடந்த 3 மாசத்துல ஆற்றி இருக்கு😐 குழந்தைய கையில வாங்கினதுமே பிரசவ வலி மறந்து போகுற மாதிரி தூக்கம் இல்லாம,நேரத்துக்கு சாப்பிடாம, வாங்கிய காயங்கள்,பட்ட வலி எல்லாம் கையில கேடயத்தை வாங்கின உடனேயே பறந்து போச்சு! 😌😌😌”
”பிரபா, என் குடும்பம், என் மாஸ்டர்கள், இத படிக்கிற நீங்கனு எல்லாருக்கும் இந்த வெற்றில பெரிய பங்கு இருக்கு! எங்க பங்கு தான் கம்மி🤗🙏🏻மக்களோட எதிர்ப்பார்ப்பும் வாழ்த்தும் தான் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க வச்சுகிட்டே இருந்தது. மிக்க நன்றி எல்லோருக்கும்🙏🏻🥰” என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.