ஆப்நகரம்

என் சோகத்துல காசு பாக்காதீங்க ப்ளீஸ்.. அப்பாவின் கடைசி போட்டோவை வெளியிட்டு அனிதா உருக்கம்

தன் அப்பாவுடன் எடுத்த கடைசி போட்டோவை இன்ஸ்டாகிராமில் மிக உருக்காங்க பதிவிட்டு இருக்கிறார் அனிதா சம்பத்.

Samayam Tamil 30 Dec 2020, 6:52 pm
அனிதா சம்பத் பிக் பாசில் இருந்து வெளியேறி சில தினங்களை மட்டுமே ஆகும் நிலையில் அவரது அப்பா திரு ஆர்.சி.சம்பத் நேற்று மரணம் அடைந்தார். அவர் மகன் உடன் சீரடி சென்று இருந்த நிலையில் ரயிலில் சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தார். அவர் ரயிலிலேயே மரணம் அடைந்ததாக செய்தி வெளியானது.
Samayam Tamil Anitha Sampath with Father


அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அனிதாவிற்கு ஆறுதலும் கூறி வருகிறார்கள். அனிதா பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு அவரது அப்பாவை சந்திக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது பற்றி அவர் மிகவும் உருக்கமாக தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அவர் அப்பாவுடன் எடுத்து கடைசி போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

"அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்..பிக்பாஸ் quarantine போகும்போது எடுத்தது.. அப்பானா எனக்கு உயிரு..எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன்..எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி.. ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன்..உன்ன வழியிலயே hospital கூட்டிட்டு போய் இருப்பேன்..நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப..
.
Sorry daddy..என்னால உன்ன காப்பாத்த முடியல..வாழ்நாள் முழுவதும் இந்த குற்றஉணர்ச்சி என்ன விட்டு போகாது.. எங்க போன ராசா...

இவ்வாறு அனிதா சம்பத் கூறி உள்ளார். அது மட்டும் இன்றி அவர் youtube சேனல்களில் இதை தவறாக தலைப்பில் போடப்படுவது பற்றியும் அவர் வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.

"Dear YouTube channels.. இதை என் followers கிட்ட தான் express பண்றேன். இதை வீடியோ பண்ணி.. வேற மாறி தப்பா டைட்டில் போடு என் சோகத்துல காசு பாக்காதீங்க ப்ளீஸ். என் வழியை உணருங்கள்.. நான் வருத்தத்தில் இருக்கிறேன். என் குடும்பம் எப்போதாவதுஅந்த கமெண்டுகளை பார்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு அனிதா கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

View this post on Instagram A post shared by Anitha Sampath (@official_anithasampath)

அடுத்த செய்தி