ஆப்நகரம்

பிக் பாஸில் நான் பேசியதை அவர்கள் ஒளிபரப்பவில்லை: அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ

அனிதா சம்பத் தான் பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆனது கடவுள் செய்த விஷயம் என கூறியிருக்கிறார். சில தினங்களில் அப்பா தவறியது பற்றி மிகவும் எமோஷ்னலாக அவர் பேசி இருக்கிறார்.

Samayam Tamil 11 Feb 2021, 11:27 pm
முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, அதன்பின் அனிதா சம்பத் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் பல்வேறு சமயங்களில் அவர் கோபப்பட்டு பேசியதால் அவரை அதிகம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
Samayam Tamil Anitha Sampath


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பின் அனிதா சம்பத்தின் அப்பா திடீர் மரணம் அடைந்தார். அது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது எலிமிநேஷன், அப்பா மரணம் பற்றி ஒரு வீடியோவில் இது பற்றி பேசி இருக்கிறார்.

நான் அந்த வாரம் நிச்சயம் வெளியில் வந்துவிடுவேன் என தெரியும். அதனால் நான் எலிமினேட் ஆனது பற்றி அதிகம் வருத்தப்படவில்லை. ஆனால் அதற்க்கு முன்பு 14 நாட்கள் என் கணவர் தனிமைப்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார்.

நான் எலிமினேட் ஆகாமல் உள்ளேயே இருந்திருந்தால், அவர் freeze டாஸ்கில் என்னை பார்க்க வீட்டுக்குள் வந்து இருப்பார். ஆனால் நான் எலிமினேட் ஆனதால் பிரபா quarantineல் இருந்தது வீணானது. நான் அதை மிஸ் செய்திருந்தாலும் வெளியில் வந்தது கடவுள் செய்த விஷயம் என நினைக்கிறேன்.

அப்படி நான் உள்ளேயே இருந்திருந்தால் அப்பா மரணமடைந்தபோது அம்மா மட்டும் தனியாக இருந்திருப்பார். அதனால் வெளியில் வந்ததே நல்லது தான் என நினைக்கிறேன் என அனிதா சம்பத் கூறியுள்ளார்.

மேலும் அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது 30 சதவீதம் மட்டும் தான் கேம் பற்றி பேசினாராம், மீதி நேரம் சினிமா, மேக்கப், குடும்பம் பற்றி தான் மற்ற போட்டியாளர்களிடம் பேசி இருக்கிறார் அவர். ஆனால் அதை எல்லாம் ஒளிபரப்பவில்லை என அனிதா சம்பத் கூறி உள்ளார்.

அடுத்த செய்தி