ஆப்நகரம்

காதல் தோல்வியால் கவலையில் தமிழ்: தேன்மொழி பி.ஏ. அப்டேட்

அரவிந்த தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் வருத்தத்தில் இருக்கிறார் தமிழ்.

Samayam Tamil 25 Nov 2020, 6:53 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தேன்மொழி பி.ஏ. தமிழுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அப்பாவும், சித்தியும் முடிவு செய்கிறார்கள்.
Samayam Tamil thaenmozhi


அது பிடிக்காத தமிழ், தேன்மொழிக்கு போன் செய்து எனக்கு சித்தி திருமண ஏற்பாடு செய்கிறார், அதில் எனக்கு விருப்பமில்லை, நீ நேரில் வருகிறாயா என கேட்கிறார். தேன்மொழி வந்ததும் அவரிடம் நான் அரவிந்தனை காதலிக்கிறேன் என கூறுகிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் தேன்மொழி. தமிழோ நான் மணந்தால் அரவிந்தை மட்டும் தான், வேறு யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்.

பிறகு இந்த விஷயத்தை அருளிடம் கூற, அவர் தமிழ் சின்ன பெண், அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் நிறைய இருக்கிறது, இது ஒத்துவராது என கூறுகிறார். தமிழின் சந்தோஷத்திற்காக நாம் இதை செய்யவேண்டுமென தேன்மொழி கூற, இருவரும் அரவிந்த் வீட்டிற்கு செல்கிறார்கள்.

அங்கு அரவிந்திடம் விஷயத்தை சொல்ல அவர்கள் தயங்குகிறார்கள். அப்போது தமிழ் தேன்மொழிக்கு போன் செய்கிறார். அவர் கட் செய்வதற்குள் பதிலாக ஆன் செய்து விடுகிறார். அவர்கள் பேசும் அனைத்தையும் தமிழ் கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ் காதலிப்பதை சொல்லாமல், உங்கள் இருவருக்கும் திருமணம் செய்யலாம் என முடிவு செய்துள்ளோம் என தேன்மொழி கூறுகிறார்.

அதற்கு அரவிந்தோ, எனக்கும் தமிழுக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கிறது, அவர் நன்றாக படிக்கும் பெண், அவர் மக்களுக்காக சேவை செய்ய ஆசைப்படுகிறார், இப்போது திருமணம் வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என அவர்களிடம் கூறி விடுகிறார். இதை போனில் கேட்டு தமிழ் அழுகிறார்.

அருளும் தேன்மொழியும் தமிழின் வீட்டிற்கு வர, அப்போது அவரின் அப்பா தமிழுக்கு திருமணம் செய்து வைக்க போவதாக கூறுகிறார். தேன்மொழி தமிழ் இருக்கும் அறைக்கு சென்று பார்க்கிறார். அவர் அழுது கொண்டிருக்க அவரை சமாதானம் செய்கிறார். தமிழோ திருமணத்தை நிறுத்த செல்கிறார்.

தேன்மொழி தனது தந்தையிடம் பேச, அவரும் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என முடிவெடுக்கிறார். இவர்கள் கதை ஒரு பக்கம் இருக்க, தேன்மொழி அருளை எப்படியாவது அவர் அம்மாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என தனது திட்டத்தை ஆரம்பித்து விடுகிறார்.

அருளுக்கு காய்ச்சல் வந்துவிட்டால் அம்மா அவரை பார்த்துக் கொள்வார் என முடிவு செய்கிறார் தேன்மொழி. இதையடுத்து அருளை இரவில் ஐஸ்கிரீம் சாப்பிட வைக்கிறார். அருளும் அவரது அம்மாவும் ஒன்றுசேர்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வேறு வழியில்லாமல் கண்ணம்மாவின் குழந்தையை ஆசிர்வதித்த பாரதி

அடுத்த செய்தி