ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கல்யாணத்தை நிறுத்தி மாஸ் காட்டிய பாக்யா: ஆத்திரத்தில் பொங்கிய கோபி.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் எழில் அமிர்தாவை காதலிப்பதாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையால் வர்ஷினியை கல்யாணம் செய்ய சம்மதித்தாகவும் கூறுகிறான்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 8 Feb 2023, 10:04 am
எழிலின் கல்யாணத்திற்கு அனைவரும் தயாராகும் போது, அங்கு வரும் பாக்யா இந்த கல்யாணம் நடக்காது என சொல்ல அனைவரும் ஆடிப்போகின்றனர். மேடையிலிருந்து கீழிறங்கி சென்று அமிர்தாவை கூட்டிக்கொண்டு வந்து நிற்கிறாள். எழில் இந்த பொண்ணைத்தான் விரும்பினான். இவளை தான் கல்யாணம் பண்ணிக்கனும் ஆசைப்பட்டா என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


ஈஸ்வரி உடனே உனக்கு என்ன பைத்தியமா எழில் விருப்பப்பட்டு தானே இது எல்லாமே நடக்குது என சொல்கிறாள். அமிர்தா அம்மா, அப்பாவிடம் நான் அன்னைக்கே உங்க வீட்டுக்கு வந்து பேசுனேன். அமிர்தாவுக்கு எங்க வீட்டு பையனுக்கும் ஒத்து வராதுன்னு. இப்போ எல்லாரும் வந்து நாடகம் போடுறீங்களா என கேட்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

உடனே பாக்யா அவுங்களை எதுவும் சொல்லாதீங்க அத்தை. நான்தான் அவுங்களை இங்க வர சொன்னேன். எழில் சொல்லட்டும். அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம்ன்னு எனக்கூற, அவன் அமைதியாகவே நிற்கிறான். வர்ஷினி அப்பா கோபத்துடன் சொந்தக்காரங்க முன்னாடி எங்களை அசிங்கப்படுத்துறீங்களா? இதுக்கு மேல நாங்க இங்க இருக்க மாட்டோம் என கூறுகிறார். அவரிடம் ஈஸ்வரி, கோபி இருவரும் எழில் வர்ஷினிக்கு தான் கல்யாணம் நடக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க என கூறுகிறாள்.

உடனே பாக்யா அது மட்டும் நடக்காது என்கிறாள். வர்ஷினி அப்பா கோபத்துடன் இனிமேல் இந்த எழில் ஒரு படம் பண்ண முடியாது. இந்த கல்யாணத்துக்காக நான் எவ்வளவு செலவு பண்ணி இருக்கேன் தெரியுமா. என்கிட்ட இருந்து ஒத்த பைசா அவனால வாங்க முடியாது என்கிறான். அதற்கு பாக்யா, நீங்க ஒருநாள் சங்கடத்தை பார்க்குறீங்க. நான் காலம் பூரா இவுங்க வாழ போறதை பார்க்குறேன். நீங்க செலவு பண்ண பணத்தை நாங்க கொடுத்துறோம் என்கிறாள்.

Baakiyalakshmi Serial: அமிர்தாவுடன் மணமேடைக்கு வந்த பாக்யா: ஆடிப்போன கல்யாண மண்டபம்.!

எழிலிடம், பணத்துக்காக ஒரு பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்குவியா? நம்பிக்கை துரோகத்தினால் நம்ம வீட்ல என்ன பிரச்சனை எல்லாம் நடந்தது என்று உனக்கு தெரியாதா? ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்திட்டு இப்படி நிற்கதியா நிற்க வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவியா? நான்தானே உன்னை வளர்த்தேன். இப்பவாது சொல்லு. உன் விருப்பப்படி தான் இந்த கல்யாணம் நடக்குதா என கேட்கிறாள்.

எழில் அமிர்தாவின் பக்கம் போய் நின்று நான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான் இந்த முடிவை எடுத்தேன், நான் எடுக்கிற முடிவு சரியா தவறான்னு யோசிக்காமல் தான் எடுத்தேன். நான் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்குவேன்னு வாக்கு கொடுத்து இருந்தேன் என சொல்ல ஈஸ்வரி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். வர்ஷினி அப்பா கோபத்துடன் மகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

https://tamil.samayam.com/tv/news/bigg-boss-maheswari-tweet-goes-to-viral/articleshow/97673225.cms

உடனே கோபி எல்லாரும் பிடிச்சவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் சந்தோஷமா வாழறாங்களா? கிடைச்ச வாழ்க்கையை சந்தோஷமாக வாழலையா? இப்போ உன்னால இந்த கல்யாணம் நின்னு போச்சு அவனுடைய கெரியரும் நாசமா போச்சு. இப்போ என்ன பண்ண போற என ஆத்திரத்தில் கத்துகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி