ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: எதிராக திரும்பிய மொத்த குடும்பம்.. கதறி அழும் பாக்யா

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று மொத்த குடும்பமும் சேர்ந்து பாக்யா மசாலா தொழிலை மூட சொல்லி சொல்வதால் கதறி அழுகிறார் அவர்.

Samayam Tamil 21 Apr 2021, 1:14 pm
பாக்கியலட்சுமி சீரியலின் நேற்றைய எபிசோடில் கோபி ஒரு இரவு முழுவதும் ராதிகா வீட்டில் இருந்துவிட்டு காலையில் தான் வீட்டுக்கு திரும்புகிறார். அவரிடம் எழில் கேள்வி கேட்கிறார்.
Samayam Tamil baakiyalakshmi serial 21 april episode update baakiya cries after whole family intimidates her
Baakiyalakshmi Serial: எதிராக திரும்பிய மொத்த குடும்பம்.. கதறி அழும் பாக்யா



கோபமான எழில்

எழில் கேள்வி கேட்டதால் கோபமான கோபி எழிலை வீட்டை விட்டு வெளியில் போக சொல்கிறார். அதன் பிறகு இன்று என்ன நடந்தது என இன்று பார்க்கலாம்.

மற்றவர்கள் எழிலை தான் குறை சொல்கிறார்கள். எல்லாம் பாக்யாவால் தான் குட்டிசுவராக போய்விட்டான் என பாட்டி சொல்கிறார். அதன் பணி பாக்யா எழிலை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் எழில் எதுவும் சரியில்லை என கோபத்துடன் கூறிவிட்டு செல்கிறார்.

இனி பிஸ்னெஸ் இல்லை..

அதன் பின் மறுநாள் மீண்டும் பஞ்சாயத்து தொடங்குகிறது. அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஜெனிக்கு கான்வென்டில் இருந்து சிஸ்டர் போன் செய்கிறார்.

மசாலா கேட்பதற்காக கால் செய்யும் அவருக்கு என்ன பதில் சொல்வது என கேட்கிறார் அவர். இதனால் பெரிய வாக்குவாதம் வெடிக்கிறது. "இனி இந்த மசாலா பிஸ்னெஸ் வேண்டாம் என அப்பா சொல்லிவிட்டார், அதனால் அம்மா இனி மசாலா தர மாட்டார்" என சொல்லிவிடு என மூத்த மகன் செழியன் சொல்கிறார்.

கோபியும் 'இனி பாக்யா எந்த பிஸ்னஸும் செய்ய மாட்டார். சொல்லிவிடு' என சொல்கிறார்.

கதறி அழும் பாக்யா

குடும்பத்தினர் எல்லோரும் தனது எதிராக பேசுவதை பார்த்து கலக்கம் அடைகிறார் பாக்யா. அவர் கண்ணீர் விடுகிறார். அதை பார்த்த ஜெனி அதிர்ச்சி அடைகிறார். சிஸ்டர் போன் நம்பர் கொடு நான் பேசி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என் சொல்லி விட்டு செல்கிறார்.

எனக்காக நீ செழியனிடம் சண்டை போடாதே, நீங்க சந்தோசமாக இருங்க என சொல்லிவிட்டு போகிறார் பாக்யா. அதன் பின் மசாலா வாங்க ஒரு பெண் வருகிறார். அவரிடம் மாமியார் இனி மசாலா வாங்க வராதே என சொல்லி அனுப்புகிறார்.

சந்தோஷிடம் பேச மறுக்கும் இனியா

பள்ளியில் இனியாவிடம் பேச மறுக்கிறார் இனியா. இனி உங்களிடம் பேச மாட்டேன் என நேரடியாகவே கூறிவிடுகிறார்.

மாலையில் இனியாவை அழைத்து செல்ல பாக்யா வருகிறார். அப்போது சந்தோஷை வழியில் பார்கிறார்கள். இனியா அவனிடம் எதுவும் பேசாததால் சந்தோஷ் சில நொடி நின்று பார்த்துவிட்டு சென்றுவிடுகிறார்.

ஏன் அவனிடம் பேசுவதில்லை என கேட்கிறார் பாக்யா. அடுத்த கிளாஸ் பையனுடன் உனக்கு எப்படி நட்பு வந்தது சொல்லு என இனியவை கேட்கிறார் பாக்யா. அவரும் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி