ஆப்நகரம்

அந்த இடத்தில் கை வைத்து அத்துமீறிய நபர்: பாக்கியலட்சுமி சீரியல் நடிகை செய்த காரியம்.!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் விமானத்தில் சென்ற போது தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 4 Apr 2023, 10:38 am
சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் இல்லத்தரசிகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. இதில் பாக்யாவின் மூத்த மருமகளாக நடித்து அனைவரிடமும் வரவேற்பை பெற்று வருபவர் திவ்யா கணேஷ். நமக்கு இப்படியாப்பட்ட மருமகள் கிடைக்க மாட்டாளா என அனைவரும் ஏங்கும் அளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் திவ்யா கணேஷ். இந்நிலையில் இவர் அளித்துள்ள லேட்டஸ்ட் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil திவ்யா கணேஷ்
திவ்யா கணேஷ்


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமி ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவை. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவுடன் வசித்து வரும் இனியா கோபத்தில் மாத்திரைகளை விழுங்கி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியுள்ளார். இதற்கு காரணம் ராதிகா தான் என அவளை திட்டி தீர்த்து வருகிறாள் ஈஸ்வரி பாட்டி. இதனால் இனியா ஹாஸ்பிட்டலில் இருந்து அடுத்ததாக பாக்யாவுடன் செல்ல போகிறாளா அல்லது ராதிகாவுடன் போக போகிறாளா என கேள்வி எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: ராதிகாவை திட்டி தீர்த்த ஈஸ்வரி: இனியா எடுக்க போகும் முடிவு என்ன.?

இதனிடையில் சீரியலில் கர்ப்பமாக இருக்கும் ஜெனிக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திவ்யா கணேஷ் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னை பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஒருநாள் இரவு நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது என் இடுப்பு பகுதியில் ஏதோ ஊர்வது போன்று இருந்தது.

என்னவென்று பார்க்கும் போது எதுவும் இல்லை. அதனை தொடர்ந்தும் இரண்டு, மூனு தடவையும் இதே உணர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தூங்குவதை போல் பார்த்த போதுதான், பின்னாடி இருந்த நபர் இந்த கேவலான செயலை செய்தது தெரிய வந்தது. இதனால் செம்ம டென்ஷன் ஆனேன். உடனடியாக அந்தாள் கையை பிடித்து கன்னத்திலே நாலு அறை பளார் பளார்ன்னு கொடுத்தேன் என தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஐஸ்வர்யா பேச்சைக்கேட்டு ஆடும் கண்ணன்: தனத்துக்கு நேர்ந்த அவமானம்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி