ஆப்நகரம்

கணவனை அடித்து வெளியில் துரத்திய ராதிகா! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

மீண்டும் மசாலா செய்து விற்கும் தொழிலை தொடங்க பாக்யா அனுமதி கேட்டு கெஞ்சியும் கோபி ஏற்றுக்கொள்ளவே இல்லை.

Samayam Tamil 18 Apr 2021, 3:05 am
பாக்யா ஆசையாக ஆரம்பித்த மசாலா பிசினெஸ் தற்போது மகள் இனியா செய்த தவறு காரணமாக கோபியால் அடித்து நொறுக்கப்பட்டு தடைபட்டு இருக்கிறது. அதை மீண்டும் தொடங்க எதாவது செய்யலாம் என பாக்யா முயற்சிக்கிறார்.
Samayam Tamil baakiyalakshmi serial episode 218 april 17 update gopi denies to accept baakiyas plea
கணவனை அடித்து வெளியில் துரத்திய ராதிகா! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று


அனுமதி கேட்கும் பாக்யா, மறுக்கும் கோபி

ராதிகா போன் செய்தார். அவருக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆன்லைன் ஆர்டர் வந்திருக்கிறது. அதனால் மீண்டும் மசாலா பணிகலை செய்ய அனுமதி கேட்கிறார் பாக்யா. அனைவரும் தூங்கிய பிறகு தான் நான் இதை செய்ய போகிறேன் எனவும் கூறுகிறார்.

ஆனால் கோபி பாக்யா சொல்ல வருவதை காது கொடுத்து கூட கேட்பதில்லை. வேண்டாம் என கூறிவிட்டேன், குடும்பத்தை மட்டும் பார். வேறு எதுவும் வேண்டாம் என மீண்டும் கூறுகிறார். (வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது).

பணம் நான் கொடுக்கிறேன்

ராதிகாவிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என பாக்யா தொடர்ந்து கூறியதால், அந்த பணத்தை நான் கொடுக்கிறேன். கடனை கட்டிவிட்டு வீட்டில் நிம்மதியாக இரு என அட்வைஸ் செய்கிறார் தாத்தா.

மசாலா பிஸினெஸ் வேண்டாம் என சொல்லும் கோபி கூட பணம் தருகிறேன் என முன்வரவில்லை.

அம்மாவை ஏன் தண்டிக்கிறீங்க

அதன் பின் இனியா சென்று கோபியிடம் பேசுகிறார். நான் செய்த தவறுக்கு ஏன் அம்மாவை தண்டிக்கிறீங்க. அவங்க என்னை கேட்டுட்டு தான் இருந்தாங்க, நான் தான் பொய் சொன்னேன் என கோபியிடம் சொல்கிறார்.

நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. எது நல்லது என எனக்கு தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன் என இனியாவையும் ஆஃப் செய்கிறார் கோபி.

ராதிகா வீட்டில் நுழையும் ராஜேஷ்

ராதிகா தனது மகள் உடன் வீட்டில் இருக்கும்போது அவரது கணவர் ராஜேஷ் உள்ளே வந்து ரகளை செய்கிறார். வீடு மாறிவிட்டால் எனக்கு தெரியாதா என கேட்கிறார். அவரை பார்த்து மகளும் பயந்து போகிறார்.

அதன் பின் ராதிகா ராஜேஷை அடித்து வெளியில் தள்ளி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறையு பெற்றது.

அடுத்த செய்தி