ஆப்நகரம்

Baakiyalakshmi: கோபி - ராதிகா நெருக்கமாக இருக்கும் போட்டோ பார்க்கும் எழில்.. வசமாக சிக்கும் கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி ராதிகாவுடன் இருப்பது எழிலுக்கு தெரியவருகிறது. போட்டோவை பார்த்து அவர் கடும் அதிர்ச்சி அடைகிறார்.

Samayam Tamil 22 Apr 2021, 5:16 pm
என்னென்னமோ செய்து வீட்டில் அனைவரையும் ஏமாற்றி வரும் கோபியின் உண்மை முகம் என்ன என்பது இன்று எழிலுக்கு தெரியவருகிறது.
Samayam Tamil baakiyalakshmi serial episode 222 review ezhil comes to know about gopi and radhika relationship
Baakiyalakshmi: கோபி - ராதிகா நெருக்கமாக இருக்கும் போட்டோ பார்க்கும் எழில்.. வசமாக சிக்கும் கோபி



இனியாவுக்கு அட்வைஸ்

ஏன் சந்தோஷிடம் பேசுவதில்லை என கேட்கும் என பாக்யா, இனியாவுக்கு ஒரு அட்வைஸ் செய்கிறார். எல்லோரும் நண்பர்கள் தான், படிப்பு தான் முக்கியம், படிப்பை ஒதுக்கி வைத்து விட்டு ஏன் அவனுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். மற்றவர்களை போல சந்தோஷையும் பார்.

சாதாரணமாக பேசு. படிப்பை முடித்துவிட்டு நல்ல நிலைக்குபோகும் வரை கஷ்டப்படு. பெண்களுக்கு படிப்பும், வேலையும் ரொம்ப ரொம்ப முக்கியம். பொண்ணுங்க பையன்களுடன் friend ஆக இருப்பது தவறு இல்லை என பாக்யா சொல்கிறார்.

ஸ்டாப் இட் ஜெனி

அதன் பின் வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் வாக்குவாதம் நடக்கிறது. இன்று மசாலா வாங்க ஒரு புது கஸ்டமர் வந்தாங்க என ஜெனி பேசிக்கொண்டிருக்கும் போது கோபி அங்கு சாப்பிட வருகிறார்.

உடனே அனைவரும் அமைதியாகிவிட, என்ன பேசினீர்கள் என கேட்கிறார். ஜெனி சொன்னதும் கோபி கோபம் அடைகிறார். ஸ்டாப் இட் என அவர் கத்தியதால் தாத்தா உடனே எழுந்து சென்றுவிடுகிறார்.

மெஷினை வித்துடு

அதன் பின் பாக்யாவுக்கு கோபி அட்வைஸ் செய்கிறார். இனி மசாலா பற்றிய எந்த பேச்சும் வேண்டாம். போஸ்டர் பார்த்து தானே புது கஸ்டமர் வந்தாங்க என சென்னாய், நானே தெருத்தெருவாக சென்று அதை எல்லாம் கிழித்துவிட்டு வருகிறேன்.

அந்த மெஷினுக்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும். அது தானே பிரச்சனை, அந்த மெஷினை விற்றுவிடு. அதன் பின் பணம் போதவில்லை என்றால் நான் தருகிறேன் என கோபி சொல்கிறார்.

போட்டோ பார்த்து எழில் அதிர்ச்சி

ராதிகாவின் கணவர் ராஜேஷ் கோபியின் வீட்டுக்கு வருகிறார். அவர் கேட்டுக்கு வெளியில் நின்று நோட்டமிடுவதை எழில் மாடியில் இருந்து பார்த்துவிடுகிறார். கீழே வந்து என்ன என விசாரிக்கும் போது 'உன் அப்பன் கோபிக்கும் என பொண்டாட்டி கூட தொடர்பு இருக்கு, நான் இல்லாதபோது என் வீட்டுக்கு வந்துட்டு போறான்' என சொல்கிறார்.

எழில் அதை நம்பாமல் பேச, ஆதாரத்திற்கு சில புகைப்படங்களையும் காட்டுகிறார் ராஜேஷ். நேற்று இரவு கோபி என் மனைவியுடன் இருந்தபோது எடுத்த போட்டோ இது. வீட்டில் இருக்கும் எல்லோரையும் வர சொல். நான் பேசணும் என கூறுகிறார் ராஜேஷ்.

'வேண்டாம்,,. என் அம்மாவால் தாங்க முடியாது' என தேடுகிறார் எழில். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி