ஆப்நகரம்

பாக்கியலட்சுமி சீரியல் கோபி அப்பாவிற்கு நேர்ந்த பரிதாப நிலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அப்பா சத்தியமூர்த்தி மாடி படியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார்.

Samayam Tamil 27 Jan 2022, 5:28 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரின் நாயகன் கோபி மனைவியை பிடிக்காமல் குடும்பத்திற்காக சகித்து கொண்டு வாழ்த்து கொண்டிருக்கிறான். அந்த சமயத்தில் சந்திக்கும் முன்னாள் காதலி மீது மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள், குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் பாக்யா என விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


கோபி தனது மனைவிக்கு தெரியாமல் ராதிகாவுடன் நெருங்கி பழகி கொண்டிருக்கிறான். பாக்கியாவின் தோழியான ராதிகாவோ கோபியின் மனைவி யாரென்று தெரியாமல் அவனுடன் நெருங்கி பழகி கொண்டிருக்கிறாள். ராதிகாவுடன் ரொமான்ஸ், அதை மறைக்க வீட்டில் தகிடுதத்தங்கள் செய்வது என்று ரோமியோவாகவே வாழ்ந்து வருகிறார் கோபி.

இந்த நிலையில் மகனின் போக்கு பற்றி தெரியவந்து கோபியை கண்டிக்கிறார் அவரின் அப்பா சத்தியமூர்த்தி. இதனாலே வீட்டில் அப்பா, மகன் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் ராதிகாவின் அம்மா கோபியை விவாகரத்து செய்துவிட்டு, விரைவில் தன் மகளை கல்யாணம் செய்யுமாறு நச்சரித்து கொண்டிருக்கிறார்.

கோபியும் அதற்கு ஆமாம் போட, இந்த விவகாரம் மயூ மூலமாக சத்தியமூர்த்தி காதுக்கு எட்டி விடுகிறது. மகனை பற்றி சொன்னால் குடும்பம் சிதறி விடும் என்ற பயத்தில் மனதிற்குள்ளையே வைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதன்பின்னர் மகனை கண்டிக்கும் சத்தியமூர்த்தி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையை சொல்ல போவதை கூறுகிறார். கோபியும் போய் சொல்லுங்க. நிம்மதியாய் இந்த வீட்டை விட்டு போறேன் என்கிறான்.

Baakiyalakshmi Serial: நெஞ்சு வலியில் ஈஸ்வரி... கோபி அப்பா எடுக்க போகும் முடிவு என்ன..?

மகனிடம் சண்டை போட்டுவிட்டு படியில் இரங்கும் போது தவறி விழுந்து விடுகிறார் சத்தியமூர்த்தி. இதனால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு வாய் பேச முடியாமல் போய்விடுகிறது. இது குறித்த புரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோபியின் நடத்தை தெரிந்து கண்டித்த ஒருவரும் பேச முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோபி ராதிகாவை திருமணம் செய்வானா? அல்லது அப்பாவின் நிலையை உணர்ந்து மனம் திருந்துவானா? என்பதற்கான விடைகளை இனிவரும் சீரியல்களில் காணலாம்.

அடுத்த செய்தி