ஆப்நகரம்

வசமாக சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோ: மகனிடம் மாட்டிக்கொண்டாரே!

மனைவியை வைத்துக்கொண்டே பாக்யலக்ஷ்மி சீரியல் ஹீரோ தோழியுடன் சுற்றிவரும் நிலையில், இன்று அது அவரது மகன் கண்களில் சிக்கிவிடுகிறது.

Samayam Tamil 26 Feb 2021, 8:49 am
பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோ மிகவும் தந்திரமாக மனைவிக்கு தெரியாமல் ராதிகா என்ற தோழியுடன் சுற்றி வருகிறார். அது வீட்டுக்கு தெரியாமல் இருக்க பல விஷயங்களை அவர் எச்சரிக்கையாக செய்தாலும் இன்று அது அவரது மகன் கண்களில் பட்டு விடுகிறது.
Samayam Tamil baakiyalakshmi serial hero son finds his extramarital affair
வசமாக சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோ: மகனிடம் மாட்டிக்கொண்டாரே!


பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம்

தற்போதெல்லாம் இரண்டு சீரியல்களை ஒன்றாக சேர்ந்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்புவது தான் பல தொலைக்காட்சிகளில் ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது. ஜீதமிழ், விஜய் டிவி, சன் டிவி என பலவும் இதை செய்து வருகின்றன.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்களை ஒன்று சேர்த்து கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பி வருகின்றனர்.

பாண்டியன் பிரதர்ஸுக்கு கிடைத்த இடம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடோன் இருக்கும் இடத்தை விற்கப்போவதாக, அதை தாங்களே வாங்கிக்கொள்வதாக பாண்டியன் பிரதர்ஸ் தெரிவித்த நிலையில், அந்த இடத்துக்கு சொந்தக்காரரான பாக்யலக்ஷ்மி சீரியல் ராதிகா அதை வில்லன் ஜனார்தனனுக்கு விற்க ரெஜிஸ்டர் ஆபிஸ் வரை செல்கிறார்.

ஆனால் அதை பாக்கியலட்சுமி சென்று தடுத்து அவரை பாண்டியன் பிரதர்ஸ் இல்லத்திற்கே கூட்டி வந்து விடுகிறார். அதன் பின் அவர்களிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கி கொண்டு இடத்தை கொடுப்பதாக கூறிவிட்டு கிளம்புகிறார்.

பிரச்சனையில் கோபி

ராதிகா இப்படி செய்ததால் கோபி கடும் கோபம் அடைகிறார். வில்லன் ஜனார்த்தனன் அவரை பிடித்து திட்டுகிறார். நான் 3 லட்சம் ரூபாய்க்கு பத்திரம் வாங்கி இருக்கிறேன், இப்போது வந்து 'சாரி' என சொல்லிவிட்டு போகிறார் அவர் என கோபியிடம் சத்தம் போடுகிறார்.

அந்த சமயத்தில் ராதிகாவுக்கு போன் செய்தாலும் பயனில்லை. அவர் சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. இதனால் கோபி தான் அவரிடம் திட்டு வாங்குகிறார்.

சென்னைக்கு கிளம்பிய பாக்கியலட்சுமி

அதன் பின் கோபி பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்துக்கு வருகிறார். அவர் வந்த பிறகு பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினர் சென்னைக்கு கிளம்புகிறார்கள். ஆனால் கோபி காரைக்குடியில் இருந்து பிறகு வருவதாக சொல்கிறார்.

அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினர் கிளம்புகின்றனர்.

மகனிடம் மாட்டிய கோபி

கோபி மற்றும் ராதிகா இருவரும் ஒன்றாக இளநீர் குடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பாக்யலக்ஷ்மி சென்ற காரும் வந்து நிற்கிறது. தண்ணீர் பாட்டில் வாங்க மகன் செல்கிறார். அந்த நேரத்தில் கோபி - ராதிகாவிடம் பேசிக்கொண்டு இருப்பதை அவர் பார்த்துவிடுகிறார்.

ஆனால் அந்த பெண் யார் என அவருக்கு தெரியவில்லை, அவர்கள் சென்ற கார் சென்னை நம்பர் என்பதையும் அவர் கவனிக்கிறார். அது யாராக இருக்கும் என யோசித்துக்கொண்டே காரை எடுத்துக்கொண்டே கிளம்புகிறார். நல்ல வேளை அதை அம்மா பார்க்கவில்லை என்று எண்ணிக்கொள்கிறார்.

வரும் நாட்களில் சிக்குவாரா கோபி? பார்க்கலாம்.

அடுத்த செய்தி